search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா
    X

    சூப்பரான மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா

    காலையில் மிகுந்துவிட்ட சப்பாத்தியை வீணாக்காமல், மாலையில் இப்படி சப்பாத்தி உப்புமாவாக செய்யலாம். இந்த சப்பாத்தி உப்புமா செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி - 4,
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    ப.மிளகாய் - 1
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு
    மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு.

    தாளிக்க :

    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - சிறிதளவு.


    செய்முறை :

    * தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சப்பாத்தியை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்த பின், ப.மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்..

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்திகளைப் போட்டுக் 5 நிமிடம் கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×