search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர டிபன் இடியாப்ப பிரியாணி
    X

    மாலை நேர டிபன் இடியாப்ப பிரியாணி

    மாலையில் டிபன் சாப்பிட ஆசைப்படுபவர்கள் இந்த இடியாப்ப பிரியாணியை செய்து சாப்பிடலாம். இப்போது இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    உதிர்த்த இடியாப்பம் - 2 கப் (400 கிராம்)
    தக்காளி - 1
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    கரம் மசாலா - 1 தேக்கரண்டி
    பிரியாணி மசாலா - 1 தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
    உப்பு - 1/2 தேக்கரண்டி

    தாளிக்க :

    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    நெய் - 2 மேஜைக்கரண்டி
    பட்டை - 1 இன்ச் அளவு
    கிராம்பு - 2
    பெரிய வெங்காயம் - 2
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை :

    * வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.

    * அடுத்து அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து சுருள வதக்கவும்.

    * தக்காளி சுருண்டு வரும் போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.  

    * இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போனதும் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.

    * மசாலா வாடை போனவுடன் உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    * சுவையான இடியாப்ப பிரியாணி ரெடி.

    * ரெடிமேடாக கிடைக்கும் இடியாப்பத்தை பயன்படுத்தி இதை செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×