search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான ஸ்நாக்ஸ் காய்கறி வடை
    X

    சத்தான ஸ்நாக்ஸ் காய்கறி வடை

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு காய்கறிகள் சேர்த்து சத்தான வடை செய்து கொடுக்கலாம். இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உளுந்தம்பருப்பு - 200 கிராம்
    கடலைப்பருப்பு - 100 கிராம்
    கேரட் துருவல் - ஒரு கப்
    கோஸ் பொடியாக நறுக்கியது - ஒரு கப்
    பச்சைப் பட்டாணி - ஒரு கப்
    புதினா - சிறிதளவு
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    எண்ணெய் - 250 மில்லி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, கேரட் துருவல், கோஸ், சோம்பு, புதினா, பட்டாணி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறுசிறு உருண்டைகளாக செய்து வடைகளாக தட்டிப் போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான காய்கறி வடை ரெடி.

    குறிப்பு:

    நாம் விரும்பும் காய்களை பொடியாக நறுக்கி சேர்த்து வடை செய்யலாம். இந்த வடைக்கு தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×