search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர சிற்றுண்டி தயிர் சேமியா
    X

    மாலை நேர சிற்றுண்டி தயிர் சேமியா

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த தயிர் சேமியாவை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - அரை கப்,
    தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
    பால் - அரை கப்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    எண்ணெய் - 4 டீஸ்பூன்,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    பெருங்காயம் - 1 சிட்டிகை,
    பச்சை மிளகாய் - 1,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    கேரட் - 1,
    முந்திரிப்பருப்பு - 5,
    உலர் திராட்சை - 10,
    இஞ்சி - சிறிய துண்டு.



    செய்முறை :

    * கேரட், இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

    * கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தயிர், பால், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

    * சேமியாவை தண்ணீர் சேர்த்து முக்கால் பதமாக வேகவைத்தெடுக்கவும். பின் நீரை வடித்துவிட்டு, குளிர்ந்த நீரில் 2 அல்லது 3 முறை அலசி நீரை நன்றாக வடித்து விடவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முந்திரி, உலர் திராட்சை இரண்டையும் சிவக்க வறுத்து தனியாக வைக்கவும்.

    * அடுத்து அதே வாணலியில் கடுகு, பெருங்காயம் தாளித்த பின் துருவிய இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    *  அடுத்து அதில் சேமியாவில் சேர்க்கவும்.

    * சேமியாவை நன்றாக கிளறிய பின்னர் அதில் கடைந்து வைத்துள்ள தயிரை சேர்த்த பின் அடுப்பை அணைக்கவும்

    * கடைசியாக கொத்தமல்லித்தழை, துருவிய கேரட், முந்திரி, உலர்திராட்சை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

    * சூப்பரான தயிர் சேமியா ரெடி.

    * இதை குளிரவைத்து வைத்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். (சற்று கெட்டியாக இருந்தால் மேலும் சற்று புளிப்பில்லாத தயிரைக் கடைந்துவிட்டு அதில் சேர்த்து பரிமாறலாம்).

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×