என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
விரைவில் செய்யலாம் எலுமிச்சை சாதம்
Byமாலை மலர்30 March 2017 5:18 AM GMT (Updated: 30 March 2017 5:18 AM GMT)
குழந்தைகளுக்கு எலுமிச்சை சாதம் மிகவும் பிடிக்கும். இந்த சாதத்துடன் முந்திரி, வேர்க்கடலை சேர்த்து செய்யும் போது சூப்பராக இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உதிராக வடித்த சாதம்- 1 கப்
எலுமிச்சை- 3
தாளிக்க :
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 3
பச்சைமிளகாய் - 3
துருவின இஞ்சி - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 இணுக்கு
கொத்தமல்லி - அலங்கரிக்க
நிலக்கடலை அல்லது உடைத்த முந்திரிப்பருப்பு - ஒரு கைப்பிடி
செய்முறை :
* சாதத்தை விறைப்பாக வடித்துக் கொள்ளவும் (குழைய விடக் கூடாது, தண்ணீரின் அளவைக் குறைத்தாலும் நல்லெண்ணெய் விட்டாலும் ஒட்டாமல் பொல பொலவென உதிராக வரும்) வாயகன்ற பாத்திரத்தில் சாதத்தை ஆற விடவும்.
* கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வெடித்தவுடன் துருவிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.
* மற்றொரு கடாயில் நிலக்கடலை அல்லது முந்திரியை வறுத்து இதனுடன் சேர்க்கவும்.
* தாளித்த பொருட்களுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
* அடுத்து ஆறின சாதத்துடன் தாளிசக்கலவையைக் கொட்டிக் கிளறவும்.
* சாதத்தை நன்றாக கலந்து பின் கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
* சூப்பரான எலுமிச்சை சாதம் ரெடி.
* தொட்டுக் கொள்ள கத்திரிக்காய் துவையல், பருப்புத்துவையல், சிப்ஸ் போன்றவை அருமையான இணைகள்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உதிராக வடித்த சாதம்- 1 கப்
எலுமிச்சை- 3
தாளிக்க :
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 3
பச்சைமிளகாய் - 3
துருவின இஞ்சி - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 இணுக்கு
கொத்தமல்லி - அலங்கரிக்க
நிலக்கடலை அல்லது உடைத்த முந்திரிப்பருப்பு - ஒரு கைப்பிடி
செய்முறை :
* சாதத்தை விறைப்பாக வடித்துக் கொள்ளவும் (குழைய விடக் கூடாது, தண்ணீரின் அளவைக் குறைத்தாலும் நல்லெண்ணெய் விட்டாலும் ஒட்டாமல் பொல பொலவென உதிராக வரும்) வாயகன்ற பாத்திரத்தில் சாதத்தை ஆற விடவும்.
* கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வெடித்தவுடன் துருவிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.
* மற்றொரு கடாயில் நிலக்கடலை அல்லது முந்திரியை வறுத்து இதனுடன் சேர்க்கவும்.
* தாளித்த பொருட்களுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
* அடுத்து ஆறின சாதத்துடன் தாளிசக்கலவையைக் கொட்டிக் கிளறவும்.
* சாதத்தை நன்றாக கலந்து பின் கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
* சூப்பரான எலுமிச்சை சாதம் ரெடி.
* தொட்டுக் கொள்ள கத்திரிக்காய் துவையல், பருப்புத்துவையல், சிப்ஸ் போன்றவை அருமையான இணைகள்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X