search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோவா ஸ்பெஷல் இறால் புலாவ்
    X

    கோவா ஸ்பெஷல் இறால் புலாவ்

    கோவாவின் இறால் புலாவ் ரெசிபி மிகவும் பிரபலமானது. இன்று எளிய முறையில் வீட்டிலேயே சுவையான இறால் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 250 கிராம்
    அரிசி - 1 கப்
    வெண்ணெய் - 3 டீஸ்பூன்
    சீரகம் - அரை ஸ்பூன்
    கிராம்பு - 4
    இலவங்கப்பட்டை - 3
    ஏலக்காய் - 2
    பிரியாணி இலை - 1
    இஞ்சி, பூண்டு விழுது, - 2 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 2
    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
    தேங்காய்ப்பால் - 1 கப்
    உப்பு - சுவைக்கேற்ப
    எண்ணெய் - தேவைக்கு
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * இறால் நன்றாக சுத்தம் செய்த பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    * அரிசியை நன்கு கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

    * அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெண்ணெய் விட்டு சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின் பொடியாக  நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போக வதக்கியதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * தக்காளி நன்கு வதங்கியதும் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

    * அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர், தேங்காய்ப்பால், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கடாயை மூடி புலாவை வேக வைக்கவும்.

    * மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு மசாலா கலந்த இறாலை இட்டு நன்கு கிளறி விட்டு இறால் ஒரளவு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    * புலாவ் வெந்ததும் அதன் மேலாக கொத்தமல்லி இலையை தூவி விட்டு வறுத்த இறாலை வைத்து அழகுப்படுத்தி பரிமாறலாம்.

    * கோவாவின் பிரபலமான இறால புலாவ் ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×