search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர ஸ்நாக்ஸ் காராச்சேவு
    X

    மாலை நேர ஸ்நாக்ஸ் காராச்சேவு

    கொஞ்சம் மெனக்கெட்டால், சுவையும் சுத்தமும் கொண்ட குழந்தைகள் விரும்பும் இந்த ஸ்நாக்ஸை வீட்டிலேயே செய்யலாம். இப்போது இந்த காராச்சேவு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 1 கப்
    அரிசி மாவு - கப்
    மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
    பூண்டு - 6 பல்
    பெருங்காயம் - 1 சிட்டிகை
    சீரகம் - டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கடலை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.



    செய்முறை :

    * கடலை மாவையும், அரிசி மாவையும் சலித்து வைக்கவும் (சிறு கற்கள் இருக்கும் பட்சத்தில் எண்ணெயில் போடும் போது வெடிக்கும் அபாயம் உள்ளது).

    * பூண்டை சிறிது தண்ணீர் தெளித்து மைய அரைத்துக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு அதனுடன் சீரகம், உப்பு, பெருங்காயம், மிளகாய் தூள், பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெயை கொதிக்க விடவும்.

    * சேவுக்கு என்றே சிறு துளைகள் கொண்ட தனி அச்சு உள்ளது. அதைக் கொண்டு மாவு தேய்த்து, எண்ணெயில் நேரடியாக விடவும்.

    * பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து, காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

    * மாலை நேர ஸ்நாக்ஸ் காராச்சேவு ரெடி.

    குறிப்பு :

    இந்த மாவில் விரும்பினால் சிறிது வெண்ணெய் சேர்க்கலாம். ஆனால், அதிக நாள் வைத்திருக்க முடியாது. மாவு பிசைந்த உடன் சேவு செய்துவிட வேண்டும். அல்லது கடுகடுப்பாக மாறிவிடும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×