என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மாலை நேர ஸ்நாக்ஸ் காராச்சேவு
Byமாலை மலர்11 March 2017 9:52 AM GMT (Updated: 11 March 2017 9:52 AM GMT)
கொஞ்சம் மெனக்கெட்டால், சுவையும் சுத்தமும் கொண்ட குழந்தைகள் விரும்பும் இந்த ஸ்நாக்ஸை வீட்டிலேயே செய்யலாம். இப்போது இந்த காராச்சேவு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - கப்
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 6 பல்
பெருங்காயம் - 1 சிட்டிகை
சீரகம் - டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடலை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை :
* கடலை மாவையும், அரிசி மாவையும் சலித்து வைக்கவும் (சிறு கற்கள் இருக்கும் பட்சத்தில் எண்ணெயில் போடும் போது வெடிக்கும் அபாயம் உள்ளது).
* பூண்டை சிறிது தண்ணீர் தெளித்து மைய அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு அதனுடன் சீரகம், உப்பு, பெருங்காயம், மிளகாய் தூள், பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெயை கொதிக்க விடவும்.
* சேவுக்கு என்றே சிறு துளைகள் கொண்ட தனி அச்சு உள்ளது. அதைக் கொண்டு மாவு தேய்த்து, எண்ணெயில் நேரடியாக விடவும்.
* பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து, காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
* மாலை நேர ஸ்நாக்ஸ் காராச்சேவு ரெடி.
குறிப்பு :
இந்த மாவில் விரும்பினால் சிறிது வெண்ணெய் சேர்க்கலாம். ஆனால், அதிக நாள் வைத்திருக்க முடியாது. மாவு பிசைந்த உடன் சேவு செய்துவிட வேண்டும். அல்லது கடுகடுப்பாக மாறிவிடும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - கப்
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 6 பல்
பெருங்காயம் - 1 சிட்டிகை
சீரகம் - டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடலை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை :
* கடலை மாவையும், அரிசி மாவையும் சலித்து வைக்கவும் (சிறு கற்கள் இருக்கும் பட்சத்தில் எண்ணெயில் போடும் போது வெடிக்கும் அபாயம் உள்ளது).
* பூண்டை சிறிது தண்ணீர் தெளித்து மைய அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு அதனுடன் சீரகம், உப்பு, பெருங்காயம், மிளகாய் தூள், பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெயை கொதிக்க விடவும்.
* சேவுக்கு என்றே சிறு துளைகள் கொண்ட தனி அச்சு உள்ளது. அதைக் கொண்டு மாவு தேய்த்து, எண்ணெயில் நேரடியாக விடவும்.
* பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து, காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
* மாலை நேர ஸ்நாக்ஸ் காராச்சேவு ரெடி.
குறிப்பு :
இந்த மாவில் விரும்பினால் சிறிது வெண்ணெய் சேர்க்கலாம். ஆனால், அதிக நாள் வைத்திருக்க முடியாது. மாவு பிசைந்த உடன் சேவு செய்துவிட வேண்டும். அல்லது கடுகடுப்பாக மாறிவிடும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X