search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான சோளா பூரி
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான சோளா பூரி

    குழந்தைகளுக்கு சோளா பூரி மிகவும் பிடிக்கும். ஹோட்டலில் கிடைக்கும் சோளா பூரியை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 1 கப்
    தயிர் - 2 ஸ்பூன்
    ஆப்பசோடா - ஒரு பின்ஞ்
    உப்பு - ஒரு தேக்கரண்டி
    எண்ணெய் - அரை தேக்கரண்டி



    செய்முறை :

    * ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, எண்ணெய், ஆப்பசோடா, தயிர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து 2 மணிநேரம் ஊற வைக்கவும்.

    * பிசைந்த மாவை சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். அதை சப்பாத்தி கட்டையில் வைத்து நன்கு பெரிதாக தேய்த்துக் கொள்ளவும்.

    * தேய்த்ததும் வட்டமாக வருவதற்கு ஒரு வட்டமான மூடியை மாவில் வைத்து அழுத்தி வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை போட்டு வெள்ளை நிறத்தில் பொரித்து எடுக்கவும்.

    * சுவையான சோளா பூரி தயார்.

    * இதற்கு தொட்டு கொள்ள சென்னா மசாலா சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×