என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான கொண்டைக்கடலை குருமா
Byமாலை மலர்24 Feb 2017 9:49 AM GMT (Updated: 24 Feb 2017 9:49 AM GMT)
சப்பாத்தி, பூரிக்கு சூப்பரான சைடு டிஷ் கொண்டைக்கடலை குருமா. இன்று இந்த கொண்டைக்கடலை குருமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்
தேவையான பொருள்கள் :
கொண்டைக்கடலை - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1
இஞ்சி - சிறிது
பூண்டு - 3 பற்கள்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கொத்துமல்லி இலை - ஒரு கொத்து
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
அரைக்க :
தேங்காய் - 3 துண்டுகள்
கசகசா - 1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 1/4 டீஸ்பூன்
தாளிக்க :
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கிராம்பு - 1
பிரிஞ்சி இலை - 1
சீரகம் - கொஞ்சம்
பெருஞ்சீரகம் - கொஞ்சம்
முந்திரி - 5
செய்முறை :
* கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
* ஊறவைத்த கொண்டைக்கடலையை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது உப்பு சேர்த்து, வேக வைத்து, நீரை வடித்து வைக்கவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டை தட்டி வைக்கவும்.
* வெறும் வாணலியில் கசகசாவை லேசாக வறுத்து சிறிது சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். ஊறியதும் தேங்காய், பொட்டுக்கடலையுடன் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் கடலையை சேர்த்துக் கிளறிவிட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு, கடலை மூழ்கும் அளவு திட்டமாகத் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.
* எல்லாம் நன்றாகக் கலந்து, சிறிது நேரம் கொதித்து, வாசனை வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைக் குருமாவில் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.
* கொதி வந்து பிறகு எலுமிச்சை சாறு, கொத்துமல்லி தூவிக் இறக்கி பரிமாறவும்.
* இப்போது அருமையான, கொண்டைக்கடலை குருமா தயார்.
* இது பூரி, சப்பாத்தி, நாண், சாதம் இவற்றிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொண்டைக்கடலை - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1
இஞ்சி - சிறிது
பூண்டு - 3 பற்கள்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கொத்துமல்லி இலை - ஒரு கொத்து
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
அரைக்க :
தேங்காய் - 3 துண்டுகள்
கசகசா - 1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 1/4 டீஸ்பூன்
தாளிக்க :
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கிராம்பு - 1
பிரிஞ்சி இலை - 1
சீரகம் - கொஞ்சம்
பெருஞ்சீரகம் - கொஞ்சம்
முந்திரி - 5
செய்முறை :
* கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
* ஊறவைத்த கொண்டைக்கடலையை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது உப்பு சேர்த்து, வேக வைத்து, நீரை வடித்து வைக்கவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டை தட்டி வைக்கவும்.
* வெறும் வாணலியில் கசகசாவை லேசாக வறுத்து சிறிது சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். ஊறியதும் தேங்காய், பொட்டுக்கடலையுடன் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் கடலையை சேர்த்துக் கிளறிவிட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு, கடலை மூழ்கும் அளவு திட்டமாகத் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.
* எல்லாம் நன்றாகக் கலந்து, சிறிது நேரம் கொதித்து, வாசனை வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைக் குருமாவில் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.
* கொதி வந்து பிறகு எலுமிச்சை சாறு, கொத்துமல்லி தூவிக் இறக்கி பரிமாறவும்.
* இப்போது அருமையான, கொண்டைக்கடலை குருமா தயார்.
* இது பூரி, சப்பாத்தி, நாண், சாதம் இவற்றிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X