search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான கொண்டைக்கடலை குருமா
    X

    சூப்பரான கொண்டைக்கடலை குருமா

    சப்பாத்தி, பூரிக்கு சூப்பரான சைடு டிஷ் கொண்டைக்கடலை குருமா. இன்று இந்த கொண்டைக்கடலை குருமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்
    தேவையான பொருள்கள் :

    கொண்டைக்கடலை - ஒரு கப்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 1
    இஞ்சி - சிறிது
    பூண்டு - 3 பற்கள்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    கொத்துமல்லி இலை - ஒரு கொத்து
    எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்

    அரைக்க :

    தேங்காய் - 3 துண்டுகள்
    கசகசா - 1/2 டீஸ்பூன்
    பொட்டுக்கடலை - 1/4 டீஸ்பூன்

    தாளிக்க :

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
    கிராம்பு - 1
    பிரிஞ்சி இலை - 1
    சீரகம் - கொஞ்சம்
    பெருஞ்சீரகம் - கொஞ்சம்
    முந்திரி - 5



    செய்முறை :

    * கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

    * ஊறவைத்த கொண்டைக்கடலையை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது உப்பு சேர்த்து, வேக வைத்து, நீரை வடித்து வைக்கவும்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    * இஞ்சி, பூண்டை தட்டி வைக்கவும்.

    * வெறும் வாணலியில் கசகசாவை லேசாக வறுத்து சிறிது சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். ஊறியதும் தேங்காய், பொட்டுக்கடலையுடன் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் கடலையை சேர்த்துக் கிளறிவிட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு, கடலை மூழ்கும் அளவு திட்டமாகத் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.

    * எல்லாம் நன்றாகக் கலந்து, சிறிது நேரம் கொதித்து, வாசனை வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைக் குருமாவில் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

    * கொதி வந்து பிறகு எலுமிச்சை சாறு, கொத்துமல்லி தூவிக் இறக்கி பரிமாறவும்.

    * இப்போது அருமையான, கொண்டைக்கடலை குருமா தயார்.

    * இது பூரி, சப்பாத்தி, நாண், சாதம் இவற்றிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.


    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×