search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பட்டாணி பன்னீர் கிரேவி
    X

    பட்டாணி பன்னீர் கிரேவி

    சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக பட்டாணி பன்னீர் கிரேவி சூப்பராக இருக்கும். இன்று பட்டாணி பன்னீர் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பச்சை பட்டாணி - 1 கப்
    பன்னீர் - 100 கிராம்  
    வெங்காயம் - 2
    பூண்டு - 6 பற்கள்
    இஞ்சி - சிறிய துண்டு
    பச்சை மிளகாய் - 1
    மல்லி தூள் - 2 டீஸ்பூன்
    கிராம்பு - 2
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 2 டீஸ்பூன்
    தக்காளி - 4 (நறுக்கியது)
    கொத்தமல்லி - சிறிது
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * பன்னீரை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * வெங்காயம், பூண்டு, ப,மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின் அதே வாணலியில் கிராம்பு, சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.

    * கலவையானது நன்கு வதங்கியதும், அதில் பச்சை பட்டாணியை சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

    * பட்டாணியானது நன்கு வெந்ததும், அதில் பன்னீரை சேர்த்து கிளறி, 5 நிமிடம் மூடி வைத்து இறக்கும் போது கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

    * சுவையான பட்டாணி பன்னீர் கிரேவி ரெடி!!!

    * இதனை சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×