search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பூண்டு புளி குழம்பு செய்வது எப்படி
    X

    பூண்டு புளி குழம்பு செய்வது எப்படி

    எளிதில் சமைத்து முடிக்க ஒரு சிறந்த குழம்பு என்றால் அது பூண்டு புளி குழம்பு தான். இப்போது இந்த பூண்டு புளிக்குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பூண்டு - 100 கிராம்
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    தக்காளி - 2 (பெரியது)
    வெந்தய பொடி - 1/2 டீஸ்பூன்
    குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
    தேங்காய் பால் - 1/2 கப் (சற்று கெட்டியானது)
    புளி - 1 எலுமிச்சை அளவு
    கறிவேப்பிலை - சிறிது
    நல்லெண்ணெய் - 50 கிராம்
    சமையல் எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * பூண்டை நன்கு சுத்தமாக தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

    * புளியை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டுகளை சேர்த்து சற்று பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள், சிறிது தண்ணீர் (அதிக அளவு ஊற்றி விட வேண்டாம்) மற்றும் வேண்டிய அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

    * குழம்பானது நன்கு கொதித்ததும், கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.

    * குழம்பு நன்கு கொதித்து ஓரளவு கெட்டியானதும், அதில் நல்லெண்ணெயை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கி விடவும்.

    * இப்போது சுவையான பூண்டு புளி குழம்பு தயார்!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×