என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பூரிக்கு சூப்பரான சைடு டிஷ் உருளைக்கிழங்கு குருமா
Byமாலை மலர்3 Feb 2017 10:03 AM GMT (Updated: 3 Feb 2017 10:03 AM GMT)
உருளைக்கிழங்கு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. அந்த உருளைக்கிழங்கை வைத்து பூரிக்கு தொட்டு கொள்ள ஈஸியான குருமா செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 3
பட்டை - 1 இன்ச்
இலவங்கம் - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி
கசகசா - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து பாதி கிழங்கை மசித்து கொள்ளவும். மீதி கிழங்கை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தேங்காயை துருவிக் கொள்ளவும்.
* மிக்ஸியில் தேங்காய், கசகசா போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, இலவங்கம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் அதில் மசித்த மற்றும் வெட்டி வைத்த உருளைக்கிழங்கு போட்டு வதக்கி, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
* நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையைப் போட்டு கிளறி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.
* இப்போது சுவையான உருளைக்கிழங்கு குருமா ரெடி!!!
* இதனை சாதம், சப்பாத்தி அல்லது பூரியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 3
பட்டை - 1 இன்ச்
இலவங்கம் - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி
கசகசா - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து பாதி கிழங்கை மசித்து கொள்ளவும். மீதி கிழங்கை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தேங்காயை துருவிக் கொள்ளவும்.
* மிக்ஸியில் தேங்காய், கசகசா போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, இலவங்கம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் அதில் மசித்த மற்றும் வெட்டி வைத்த உருளைக்கிழங்கு போட்டு வதக்கி, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
* நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையைப் போட்டு கிளறி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.
* இப்போது சுவையான உருளைக்கிழங்கு குருமா ரெடி!!!
* இதனை சாதம், சப்பாத்தி அல்லது பூரியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X