search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மொச்சை நெத்திலி மீன் குழம்பு
    X

    மொச்சை நெத்திலி மீன் குழம்பு

    நெத்திலிக் குழம்பு வைத்தால் வாசனை ஊரைத் தூக்கும். இந்த நெத்திலியோடு மொச்சையையும் பக்குவமாக சேர்த்துக் கொண்டால் குழம்பு ருசி ஊரைக் கூட்டும்.
    தேவையான பொருட்கள் :

    மொச்சைப்பயறு - 100 கிராம்
    நெத்திலி மீன் - 1/2 கிலோ
    எண்ணெய் - 1 குழிக்கரண்டி
    சிறிய வெங்காயம் - 1/4 கிலோ
    தக்காளி - 1/4 கிலோ
    பூண்டு - 10 பல்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    புளி - எலுமிச்சம்பழ அளவு

    தாளிக்க :

    கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 5 (கிள்ளியது)

    செய்முறை :

    * மொச்சைப் பயறை வறுத்து ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

    * மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.

    * புளியை கரைத்து கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பூண்டை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் புளிக்கரைசலை ஊற்றவும்.

    * குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் மொச்சைப்பயிறு, நெத்திலி மீனை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

    * இப்போது மொச்சை நெத்திலி மீன் குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×