search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான மட்டன் கீமா புலாவ்
    X

    சூப்பரான மட்டன் கீமா புலாவ்

    மட்டன் வகை உணவுகளில் தனி ருசி இந்த மட்டன் கீமா புலாவ். மட்டன் கீமா புலாவை எப்படி வீட்டில் எளிய முறையில் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 கப்
    மட்டன் கொத்துக்கறி - 400 கிராம்
    தயிர் - 2 கப்
    வெங்காயம் - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
    லவங்கம் - 6
    ஏலக்காய் - 5
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    பாதாம் - 1/4 கப்
    பிஸ்தா - 1/4 கப்
    காய்ந்த திராட்சை - 1/2 கப்
    குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்
    நெய் - 5 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மட்டன் கொத்துகறியை சுத்தம் செய்து வைக்கவும்.

    * அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    * குக்கரில் நெய் விட்டு சூடானதும் மிளகு, ஏலக்காய், லவங்கம், பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    * அடுத்து அதனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, குங்குமப்பூ சேர்த்து சுத்தம் செய்த கொத்துக்கறியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    * தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் விட்டு கறியை வேக விடவும்.

    * பிரஷர் போனதும் குக்கரை திறந்து பாசுமதி அரிசியை சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும்.

    * மட்டனும் அரிசியும் வெந்ததும் மூடியைத் திறந்து ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவை பரிமாறவும்.

    * இதே முறைப்படி கொத்துக்கறிக்கு பதிலாக மட்டன் அல்லது சிக்கன் சேர்த்தும் மட்டன் புலாவ், சிக்கன் புலாவ் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×