என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சன்டே ஸ்பெஷல்: சிக்கன் பிரியாணி
Byமாலை மலர்7 Jan 2017 9:52 AM GMT (Updated: 7 Jan 2017 10:26 AM GMT)
மதுரை ஸ்பெஷல் பிரியாணிக்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து செய்வார்கள். இப்போது நாளை சன்டே ஸ்பெஷல் மதுரை சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - அரை கிலோ
சீரகச் சம்பா அரிசி - இரண்டரை கப்
சின்ன வெங்காயம் - ஒரு கப்
நாட்டுத் தக்காளி (பெரியது) - 3
பச்சை மிளகாய் - 10
இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 3 கப்
தயிர் - அரை கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
தாளிக்க:
பட்டை - 2
லவங்கம் - 2
ஏலக்காய் - 4
பிரிஞ்சி இலை - 1
அன்னாசிப்பூ - 1
கடல்பாசி - 1
லவங்க மொட்டு - 1
சோம்பு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - அரை கப்
நெய் - கால் கப்
கொத்தமல்லித்தழை, புதினா - தலா ஒரு கைப்பிடி
செய்முறை :
* சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
* சீரகச்சம்பா அரிசியைக் கழுவி ஊறவையுங்கள்.
* வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
* ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு, நன்கு காய்ந்ததும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்குங்கள்.
* தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் நன்றாக பொரியவேண்டும். தீயக்கூடாது, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பிரியாணியின் மணமே, இந்த தாளிக்கும் பொருட்கள் நன்கு பொரிவதில்தான் இருக்கிறது.
* வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, இஞ்சி பூண்டு போட்டு பச்சை வாசனை போன வதக்கவும்.
* அடுத்து தக்காளி, மஞ்சள்தூள், புதினா, கொத்தமல்லித்தழை போட்டு வதக்கவும்.
* தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கி தொக்கு பதம் வந்தவுடன் சிக்கனை போட்டு, நன்கு வதக்குங்கள்.
* எல்லாம் சேர்ந்து பச்சை வாசனை போக நன்கு வதங்கியதும், தயிர், உப்பு போட்டு, அதிலேயே சிக்கனை நன்கு வேகவிடுங்கள்.
* சிக்கன் நன்கு வெந்தபின், தேங்காய்ப்பால் சேருங்கள். இதற்கு தண்ணீரே சேர்க்கக் கூடாது.
* பால் கொதிக்கும்போது, கழுவி வைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து அரிசி வெந்து தண்ணீர் வற்றி மேலே வரும்போது, தட்டால் மூடி 5 நிமிடம் ‘தம்’ போடுங்கள்.
* இந்த மதுரை கோழி பிரியாணியின் மணம் ஊரையே இழுக்கும்!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிக்கன் - அரை கிலோ
சீரகச் சம்பா அரிசி - இரண்டரை கப்
சின்ன வெங்காயம் - ஒரு கப்
நாட்டுத் தக்காளி (பெரியது) - 3
பச்சை மிளகாய் - 10
இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 3 கப்
தயிர் - அரை கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
தாளிக்க:
பட்டை - 2
லவங்கம் - 2
ஏலக்காய் - 4
பிரிஞ்சி இலை - 1
அன்னாசிப்பூ - 1
கடல்பாசி - 1
லவங்க மொட்டு - 1
சோம்பு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - அரை கப்
நெய் - கால் கப்
கொத்தமல்லித்தழை, புதினா - தலா ஒரு கைப்பிடி
செய்முறை :
* சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
* சீரகச்சம்பா அரிசியைக் கழுவி ஊறவையுங்கள்.
* வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
* ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு, நன்கு காய்ந்ததும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்குங்கள்.
* தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் நன்றாக பொரியவேண்டும். தீயக்கூடாது, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பிரியாணியின் மணமே, இந்த தாளிக்கும் பொருட்கள் நன்கு பொரிவதில்தான் இருக்கிறது.
* வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, இஞ்சி பூண்டு போட்டு பச்சை வாசனை போன வதக்கவும்.
* அடுத்து தக்காளி, மஞ்சள்தூள், புதினா, கொத்தமல்லித்தழை போட்டு வதக்கவும்.
* தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கி தொக்கு பதம் வந்தவுடன் சிக்கனை போட்டு, நன்கு வதக்குங்கள்.
* எல்லாம் சேர்ந்து பச்சை வாசனை போக நன்கு வதங்கியதும், தயிர், உப்பு போட்டு, அதிலேயே சிக்கனை நன்கு வேகவிடுங்கள்.
* சிக்கன் நன்கு வெந்தபின், தேங்காய்ப்பால் சேருங்கள். இதற்கு தண்ணீரே சேர்க்கக் கூடாது.
* பால் கொதிக்கும்போது, கழுவி வைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து அரிசி வெந்து தண்ணீர் வற்றி மேலே வரும்போது, தட்டால் மூடி 5 நிமிடம் ‘தம்’ போடுங்கள்.
* இந்த மதுரை கோழி பிரியாணியின் மணம் ஊரையே இழுக்கும்!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X