search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சன்டே ஸ்பெஷல்: சிக்கன் பிரியாணி
    X

    சன்டே ஸ்பெஷல்: சிக்கன் பிரியாணி

    மதுரை ஸ்பெஷல் பிரியாணிக்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து செய்வார்கள். இப்போது நாளை சன்டே ஸ்பெஷல் மதுரை சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    சீரகச் சம்பா அரிசி - இரண்டரை கப்
    சின்ன வெங்காயம் - ஒரு கப்
    நாட்டுத் தக்காளி (பெரியது) - 3
    பச்சை மிளகாய் - 10
    இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
    தேங்காய்ப்பால் - 3 கப்
    தயிர் - அரை கப்
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    உப்பு - ருசிக்கேற்ப

    தாளிக்க:

    பட்டை - 2
    லவங்கம் - 2
    ஏலக்காய் - 4
    பிரிஞ்சி இலை - 1
    அன்னாசிப்பூ - 1
    கடல்பாசி - 1
    லவங்க மொட்டு - 1
    சோம்பு - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - அரை கப்
    நெய் - கால் கப்
    கொத்தமல்லித்தழை, புதினா - தலா ஒரு கைப்பிடி

    செய்முறை :


    * சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    * சீரகச்சம்பா அரிசியைக் கழுவி ஊறவையுங்கள்.

    * வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

    * ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு, நன்கு காய்ந்ததும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்குங்கள்.  

    * தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் நன்றாக பொரியவேண்டும். தீயக்கூடாது, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பிரியாணியின் மணமே, இந்த தாளிக்கும் பொருட்கள் நன்கு பொரிவதில்தான் இருக்கிறது.

    * வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, இஞ்சி பூண்டு போட்டு பச்சை வாசனை போன வதக்கவும்.

    * அடுத்து தக்காளி, மஞ்சள்தூள், புதினா, கொத்தமல்லித்தழை போட்டு வதக்கவும்.

    * தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கி தொக்கு பதம் வந்தவுடன் சிக்கனை போட்டு, நன்கு வதக்குங்கள்.

    * எல்லாம் சேர்ந்து பச்சை வாசனை போக நன்கு வதங்கியதும், தயிர், உப்பு போட்டு, அதிலேயே சிக்கனை நன்கு வேகவிடுங்கள்.

    * சிக்கன் நன்கு வெந்தபின், தேங்காய்ப்பால் சேருங்கள். இதற்கு தண்ணீரே சேர்க்கக் கூடாது.

    * பால் கொதிக்கும்போது, கழுவி வைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து அரிசி வெந்து தண்ணீர் வற்றி மேலே வரும்போது, தட்டால் மூடி 5 நிமிடம் ‘தம்’ போடுங்கள்.  

    * இந்த மதுரை கோழி பிரியாணியின் மணம் ஊரையே இழுக்கும்!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×