என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி
Byமாலை மலர்4 Jan 2017 9:39 AM GMT (Updated: 4 Jan 2017 9:39 AM GMT)
வெஜிடபிள் பிரியாணியில் தேங்காய் பால் சேர்த்து செய்தால் சுவையும் மணமும் கொஞ்சம் தூக்கலாவே இருக்கும். இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிரியாணி அரிசி - 1 டம்ளர்
பீன்ஸ், கேரட், காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு, நூல்கோல் எல்லாம் சேர்த்து நறுக்கிய துண்டங்கள் - 3 டம்ளர்
நெய் - கால் கப்
பெரிய வெங்காயம் - 2
முந்திரிப் பருப்பு - 20
கிராம்பு - 6
லவங்கப்பட்டை - 6
ஏலக்காய - 6
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பெரிய தேங்காய - 1/2 மூடி
உப்பு - 2 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் - 1
பச்சை மிளகாய் - 2
செய்முறை :
* முதலில் காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* அரிசியை கழுவி வைக்கவும்.
* எலும்ச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைக்கவும்.
* கிராம்பு, பட்டை, ஏலக்காய் முதலியவைகளை பொடித்து கொள்ளவும்.
* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப் பருப்பையும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, காய்கறிகள், பொடித்த கிராம்பு பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* அடுத்து அதில் தேங்காய்ப் பாலும் தண்ணீருமாகச் சேர்த்து 2 1/2 டம்ளர் விட்டு, கொதிக்கும்பொழுது கழுவி வைத்த அரிசி, எலுமிச்சை சாறு, உப்பு போடவும்.
* தீயைக் குறைத்து நிதானமாக எரியவிட வேண்டும்.
* அரிசி நன்றாக வெந்தவுடன் இறக்கி வைக்க வேண்டும்.
* இதுக்கு வெங்காயத் தயிர் பச்சடி நன்கு பொருத்தமாக இருக்கும்.
* சூப்பரான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பிரியாணி அரிசி - 1 டம்ளர்
பீன்ஸ், கேரட், காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு, நூல்கோல் எல்லாம் சேர்த்து நறுக்கிய துண்டங்கள் - 3 டம்ளர்
நெய் - கால் கப்
பெரிய வெங்காயம் - 2
முந்திரிப் பருப்பு - 20
கிராம்பு - 6
லவங்கப்பட்டை - 6
ஏலக்காய - 6
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பெரிய தேங்காய - 1/2 மூடி
உப்பு - 2 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் - 1
பச்சை மிளகாய் - 2
செய்முறை :
* முதலில் காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* அரிசியை கழுவி வைக்கவும்.
* எலும்ச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைக்கவும்.
* கிராம்பு, பட்டை, ஏலக்காய் முதலியவைகளை பொடித்து கொள்ளவும்.
* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப் பருப்பையும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, காய்கறிகள், பொடித்த கிராம்பு பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* அடுத்து அதில் தேங்காய்ப் பாலும் தண்ணீருமாகச் சேர்த்து 2 1/2 டம்ளர் விட்டு, கொதிக்கும்பொழுது கழுவி வைத்த அரிசி, எலுமிச்சை சாறு, உப்பு போடவும்.
* தீயைக் குறைத்து நிதானமாக எரியவிட வேண்டும்.
* அரிசி நன்றாக வெந்தவுடன் இறக்கி வைக்க வேண்டும்.
* இதுக்கு வெங்காயத் தயிர் பச்சடி நன்கு பொருத்தமாக இருக்கும்.
* சூப்பரான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X