என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான சில்லி சிக்கன் குழம்பு
Byமாலை மலர்24 Nov 2016 8:54 AM GMT (Updated: 24 Nov 2016 8:54 AM GMT)
சில்லி சிக்கன் பிரையை போல் சில்லி சிக்கன் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - ½ கிலோ
தயிர் - ½ கப்
பூண்டு - 6 பல்
குடைமிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1½ தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன், தயிர் அரை தேக்கரண்டி, உப்பு, மஞ்சள்த்தூள் போட்டு நன்றாக கலந்து பிரிட்ஜில் அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, குடைமிளகாயை நறுக்கிக்கொள்ளவும்.
* பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறவும்.
* பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு அதில் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் பிரிட்ஜில் ஊற வைத்த சிக்கனை போட்டு ஐந்து நிமிடங்கள் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்.
* தொடர்ந்து 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
* சிக்கன் பாதியளவு வெந்தவுடன் குடைமிளகாயைச் சேர்க்கவும்.
* சிக்கன் நன்றாக வெந்தவுடன் குழம்பில் நறுக்கிய பூண்டு, கரம் மசாலாத்தூள் 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
* கடைசியாக கொத்துமல்லி தூவி இறக்கவும்.
* சுவையான சில்லி சிக்கன் குழம்பு தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிக்கன் - ½ கிலோ
தயிர் - ½ கப்
பூண்டு - 6 பல்
குடைமிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1½ தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன், தயிர் அரை தேக்கரண்டி, உப்பு, மஞ்சள்த்தூள் போட்டு நன்றாக கலந்து பிரிட்ஜில் அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, குடைமிளகாயை நறுக்கிக்கொள்ளவும்.
* பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறவும்.
* பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு அதில் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் பிரிட்ஜில் ஊற வைத்த சிக்கனை போட்டு ஐந்து நிமிடங்கள் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்.
* தொடர்ந்து 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
* சிக்கன் பாதியளவு வெந்தவுடன் குடைமிளகாயைச் சேர்க்கவும்.
* சிக்கன் நன்றாக வெந்தவுடன் குழம்பில் நறுக்கிய பூண்டு, கரம் மசாலாத்தூள் 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
* கடைசியாக கொத்துமல்லி தூவி இறக்கவும்.
* சுவையான சில்லி சிக்கன் குழம்பு தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X