என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான மஷ்ரூம் - சிக்கன் குருமா செய்வது எப்படி
Byமாலை மலர்4 Nov 2016 3:54 AM GMT (Updated: 4 Nov 2016 3:55 AM GMT)
சப்பாத்தி, பரோட்டாவிற்கு மஷ்ரூம், சிக்கன் சேர்த்து குருமா செய்வதால் சூப்பராக இருக்கும். இப்போது அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பட்டன் காளான் - 200 கிராம்
சிக்கன் - 250 கிராம் (எலும்பு இல்லாதது)
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால்டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி, புதினா - சிறிது
தேங்காய் - 3 பத்தை
முந்திரி - 10
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
செய்முறை :
* ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மற்றொரு வெங்காயத்துடன், தக்காளி, தேங்காய், முந்திரி சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்து எடுக்கவும்.
* காளானை கொதிக்கும் நீரில் போட்டு அலசி, நறுக்கி வைக்கவும்.
* சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
* அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
* அத்துடன் சிக்கன், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* சிக்கன் முக்கால் பாகம் வெந்தவுடன் காளான் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* நன்கு கொதி வந்தவுடன் அரைத்த வைத்துள்ள விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
* அடுப்பை சிம்மில் வைத்து குருமா நன்றாக கொதித்து கிரேவி பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.
* சுவையான சிக்கன் - காளான் குருமா ரெடி.
* சப்பாத்தி, பரோட்டா, நாண், ஆப்பம், தோசை, இட்லி, சாதம் வகைகளுடனும் பரிமாறலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பட்டன் காளான் - 200 கிராம்
சிக்கன் - 250 கிராம் (எலும்பு இல்லாதது)
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால்டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி, புதினா - சிறிது
தேங்காய் - 3 பத்தை
முந்திரி - 10
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
செய்முறை :
* ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மற்றொரு வெங்காயத்துடன், தக்காளி, தேங்காய், முந்திரி சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்து எடுக்கவும்.
* காளானை கொதிக்கும் நீரில் போட்டு அலசி, நறுக்கி வைக்கவும்.
* சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
* அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
* அத்துடன் சிக்கன், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* சிக்கன் முக்கால் பாகம் வெந்தவுடன் காளான் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* நன்கு கொதி வந்தவுடன் அரைத்த வைத்துள்ள விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
* அடுப்பை சிம்மில் வைத்து குருமா நன்றாக கொதித்து கிரேவி பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.
* சுவையான சிக்கன் - காளான் குருமா ரெடி.
* சப்பாத்தி, பரோட்டா, நாண், ஆப்பம், தோசை, இட்லி, சாதம் வகைகளுடனும் பரிமாறலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X