என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான ஜாங்கிரி
Byமாலை மலர்26 Oct 2016 9:13 AM GMT (Updated: 26 Oct 2016 10:11 AM GMT)
தீபாவளிக்கு ஜாங்கிரியை கடையில் வாங்காமல் வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
உளுந்து - ஒரு கப்
சர்க்கரை - 3 கப்
ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை
ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* வாய் அகன்ற பாத்திரத்தில் சீனியைப் போட்டு மூழ்கும் வரை தண்ணிர் ஊற்றி எசன்ஸ், சேர்த்து அடுப்பில் வைத்து பாகு தயாரித்து தனியாக வைக்கவும்.
* உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீர் தெளிக்காமல் நன்கு அரைக்கவும். கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு மாவை நன்றாக பந்து போல மென்மையாக கெட்டியாகும் வரை அரைக்கவும். அதனுடன் ஃபுட் கலர், அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
* வெள்ளை துணி அல்லது கெட்டியான பாலித்தின் கவரில் ஒரு சிறிய ஓட்டை போட்டு, அதில் மாவுக் கலவையை போட்டு, மூட்டை போல பிடித்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் குறைந்த தீயில் வைத்து, துணியில் உள்ள மாவை முதலில் வட்டமாகவும், பிறகு அதன் மேலேயே சிறு சிறு வட்டங்களாகவும் பிழிந்துவிடவும்.
* எண்ணெய் அதிகச் சூடாக இருக்கக்கூடாது.
* இருபக்கமும் வெந்ததும் அதாவது மொறுமொறுப்பாக வேகக்கூடாது. எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவிட்டு எடுக்கவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறினால் போதும்.
* சுவையான இனிப்பான ஜாங்கிரி தயார்.
* இந்த தீபாவளிக்கு கண்டிப்பாக ஜாங்கிரி செய்து பாருங்கள்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உளுந்து - ஒரு கப்
சர்க்கரை - 3 கப்
ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை
ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* வாய் அகன்ற பாத்திரத்தில் சீனியைப் போட்டு மூழ்கும் வரை தண்ணிர் ஊற்றி எசன்ஸ், சேர்த்து அடுப்பில் வைத்து பாகு தயாரித்து தனியாக வைக்கவும்.
* உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீர் தெளிக்காமல் நன்கு அரைக்கவும். கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு மாவை நன்றாக பந்து போல மென்மையாக கெட்டியாகும் வரை அரைக்கவும். அதனுடன் ஃபுட் கலர், அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
* வெள்ளை துணி அல்லது கெட்டியான பாலித்தின் கவரில் ஒரு சிறிய ஓட்டை போட்டு, அதில் மாவுக் கலவையை போட்டு, மூட்டை போல பிடித்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் குறைந்த தீயில் வைத்து, துணியில் உள்ள மாவை முதலில் வட்டமாகவும், பிறகு அதன் மேலேயே சிறு சிறு வட்டங்களாகவும் பிழிந்துவிடவும்.
* எண்ணெய் அதிகச் சூடாக இருக்கக்கூடாது.
* இருபக்கமும் வெந்ததும் அதாவது மொறுமொறுப்பாக வேகக்கூடாது. எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவிட்டு எடுக்கவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறினால் போதும்.
* சுவையான இனிப்பான ஜாங்கிரி தயார்.
* இந்த தீபாவளிக்கு கண்டிப்பாக ஜாங்கிரி செய்து பாருங்கள்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X