search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு பிடித்தமான தூத்பேடா
    X

    குழந்தைகளுக்கு பிடித்தமான தூத்பேடா

    குழந்தைகளுக்கு பிடித்தமான தூத்பேடாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். எப்படி என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 லிட்டர்
    பட்டர் - 2 ஸ்பூன்
    சீனி - 1 கப்
    கார்ன் ஃப்ளார் - 11/2 டேபிள் ஸ்பூன்
    பிஸ்தா பருப்பு - 25
    பாதாம் பருப்பு - 10

    செய்முறை :

    * பிஸ்தா பருப்பை தின் ஸ்லைசுகளாக துருவிக் கொள்ளவும்.

    * பாதாம் பருப்பை இரண்டாக நறுக்கி வைக்கவும்.

    * ஒரு அடி கனமான வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் நன்கு கொதிக்கத் தொடங்கியதும் அடுப்பைக் குறைத்து வைக்கவும். பால் முழுவதும் சுண்டி ஏடு வர ஆரம்பிக்கும் சமயம் சீனியைப் போடவும்.

    * சீனி கரைந்ததும் கார்ன் ஃப்ளாரைப் போட்டு நன்கு கிளறவும்.

    * நன்கு கெட்டியான பதம் வரும் போது பட்டரை போட்டு அடுப்பிலிருந்து இறக்கி உருண்டைகள் பிடித்து அதன் மேல் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பை தூவினால் அருமையான தூத்பேடா தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×