search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பன்னீர் இனிப்பு போளி செய்வது எப்படி
    X

    பன்னீர் இனிப்பு போளி செய்வது எப்படி

    பன்னீர் போளி மிகவும் சுவையாக இருக்கும். பன்னீர் வைத்து போளி செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - ஒரு கோப்பை
    கோதுமை மாவு - ஒரு கோப்பை
    எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
    உப்புத்துள் -  ஒரு சிட்டிகை
    துருவிய பன்னீர் -  முக்கால் கோப்பை
    துருவிய தேங்காய் -  அரைகோப்பை
    வெல்லம் - 1/2 கோப்பை
    ஏலக்காய் - நான்கு
    பொடித்த முந்திரி  - தேவைக்கு
    நெய்/எண்ணெய் -  தேவைக்கேற்ப

    செய்முறை :

    * ஒரு பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவை ஒன்றாக கலந்து அதில் உப்பு மற்றும் எண்ணெயை ஊற்றி நீரைத் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து குறைந்தது அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

    * மிக்ஸியில் வெல்லத்துடன் ஏலக்காயைச் சேர்த்து நன்கு பொடித்து வைக்கவும்

    * வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி அதில் துருவிய பன்னீரைப் போட்டு ஈரம் போக வறுத்து தனியே ஆற வைக்கவும்.

    * பின்பு அதே வாணலியில் தேங்காயை கொட்டி இளஞ்சிவப்பாக வறுத்து ஆறவைத்து அதையும் பன்னீரில் கொட்டி கலக்கவும்.

    * பின்பு அதில் பொடித்த வெல்லம் மற்றும் முந்திரி பொடியையும் சேர்த்து நன்கு கலந்து பூரணம் தயாரிக்கவும்.

    * பிசைந்து வைத்த மாவிலிருந்து ஒரு எலுமிச்சையளவு உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வட்டமாக இட்டு அதன் நடுவில் சிறிது பூரணத்தை வைத்து மூடி இலேசாக அழுத்தி மீண்டும் தேய்த்து வைக்கவும்.

    * இவ்வாறு அனைத்து மாவையும் போளியாக இட்டு வைக்கவும்.

    * தோசை தவாவை அடுப்பில் வைத்து தயாரித்து வைத்துள்ள போளியைப் போட்டு இரண்டு புறமும் நெய்யை தடவி வேக வைத்து தீயாமல் சுட்டெடுக்கவும்.

    * பன்னீர் இனிப்பு போளி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×