search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பித்தத்தைத் தணிக்கும் நார்த்தங்காய் சாதம்
    X

    பித்தத்தைத் தணிக்கும் நார்த்தங்காய் சாதம்

    பித்தம், தலைசுற்றல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு நார்த்தங்காய் நல்ல பலனை தரும். இன்று நார்த்தங்காய் வைத்து சூப்பரான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நார்த்தங்காய் - ஒன்று,
    மிளகுத்தூள், சீரகத்தூள், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு - தலா ஒரு ஸ்பூன்,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    பெருங்காயம் - சிறிதளவு,
    சாதம் - ஒரு கப்,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * நார்த்தங்காயை இரண்டாக நறுக்கி வைக்கவும். இரண்டு மூடியிலும் மிளகுத்தூள், சீரகத்தூளை தூவி, அடுப்பு பக்கத்தில் அனலில் வைக்கவும் (15 நிமிடம்).

    * வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பெருங்காயம், மஞ்சள்தூள் தாளித்து, சாதத்தில் சேர்த்து நன்றாக கிளறவும்.

    * கடைசியாக அனலில் வைத்த நார்த்தங்காயை எடுத்து சாறு பிழிந்து, உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

    * சூப்பரான நார்த்தங்காய் சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×