search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கம்பு தயிர் சாதம்
    X

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கம்பு தயிர் சாதம்

    சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கம்பு தயிர் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு - ஒரு கப்,
    பால் - ஒன்றரை கப்,
    தயிர் - ஒரு கரண்டி,
    கடுகு, உளுந்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
    பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2,
    இஞ்சி - ஒரு துண்டு,
    பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு.



    செய்முறை:

    * பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கம்பை சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறிவைக்கவும். சிறிது நேரம் கழித்து, மிக்ஸியில் இரண்டு முறை அடித்து, பிறகு புடைத்து, தோலை நீக்கவும். (ஒரு தட்டில் பரத்தி, ஊதினால் தோல் நீங்கிவிடும்). பிறகு, மீண்டும் மிக்ஸியில் போட்டு, ரவைப் பதத்தில் உடைத்துக்கொள்ளவும்.

    * உடைத்த கம்புடன் ஐந்து கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வேக வைக்கவும். நாலைந்து விசில் வந்ததும் இறக்கி, அதில் பால் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் கம்பு சாதத்தில் சேர்க்கவும்.

    * கடைசியாக, உப்பு, தயிர், தேவையான தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.

    * கம்பு தயிர் சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×