என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த கேழ்வரகு - கீரை ஊத்தப்பம்
Byமாலை மலர்6 April 2017 5:17 AM GMT (Updated: 6 April 2017 5:17 AM GMT)
வெயில் காலத்தில் கேழ்வரகு, கீரையை அதிகளவு சேர்த்து கொள்வது உடலுக்கு குளிர்ச்சியை தரும். இன்று கேழ்வரகில் கீரை சேர்த்து ஊத்தப்பம் செய்யும் முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இட்லி மாவு - 1 கப்
முழு ராகி - 1 கப்
கீரை - 1 கப்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
சீரகம் - 1 ஸ்பூன்
செய்முறை :
* சிறுகீரை, முளை கீரை, வெந்தயகீரை, முருங்கைகீரை என எந்த கீரை வேண்டுமானதும் சேர்த்து கொள்ளலாம். விருப்பப்பட்ட கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முழு கேழ்வரகை 2 மணி நேரம் ஊற வைத்து கழுவி, கல் நீக்கி மிக்ஸியில் நன்றாக அரைத்து புளித்த இட்லி மாவுடன் உப்பும் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் கீரை, உப்பு போட்டு 3 நிமிடம் வதக்கி ஆற விடவும்.
* வதங்கிய கீரையை மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை சற்று தடியாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சத்து நிறைந்த கேழ்வரகு கீரை ஊத்தப்பம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இட்லி மாவு - 1 கப்
முழு ராகி - 1 கப்
கீரை - 1 கப்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
சீரகம் - 1 ஸ்பூன்
செய்முறை :
* சிறுகீரை, முளை கீரை, வெந்தயகீரை, முருங்கைகீரை என எந்த கீரை வேண்டுமானதும் சேர்த்து கொள்ளலாம். விருப்பப்பட்ட கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முழு கேழ்வரகை 2 மணி நேரம் ஊற வைத்து கழுவி, கல் நீக்கி மிக்ஸியில் நன்றாக அரைத்து புளித்த இட்லி மாவுடன் உப்பும் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் கீரை, உப்பு போட்டு 3 நிமிடம் வதக்கி ஆற விடவும்.
* வதங்கிய கீரையை மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை சற்று தடியாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சத்து நிறைந்த கேழ்வரகு கீரை ஊத்தப்பம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X