search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த கேழ்வரகு - கீரை ஊத்தப்பம்
    X

    சத்து நிறைந்த கேழ்வரகு - கீரை ஊத்தப்பம்

    வெயில் காலத்தில் கேழ்வரகு, கீரையை அதிகளவு சேர்த்து கொள்வது உடலுக்கு குளிர்ச்சியை தரும். இன்று கேழ்வரகில் கீரை சேர்த்து ஊத்தப்பம் செய்யும் முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி மாவு - 1 கப்
    முழு ராகி - 1 கப்
    கீரை - 1 கப்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    சீரகம் - 1 ஸ்பூன்



    செய்முறை :

    * சிறுகீரை, முளை கீரை, வெந்தயகீரை, முருங்கைகீரை என எந்த கீரை வேண்டுமானதும் சேர்த்து கொள்ளலாம். விருப்பப்பட்ட கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முழு கேழ்வரகை 2 மணி நேரம் ஊற வைத்து கழுவி, கல் நீக்கி மிக்ஸியில் நன்றாக அரைத்து புளித்த இட்லி மாவுடன் உப்பும் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் கீரை, உப்பு போட்டு 3 நிமிடம் வதக்கி ஆற விடவும்.

    * வதங்கிய கீரையை மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை சற்று தடியாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    * சத்து நிறைந்த கேழ்வரகு கீரை ஊத்தப்பம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×