என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த ராகி ஆலு பரோட்டா
Byமாலை மலர்6 April 2017 3:28 AM GMT (Updated: 6 April 2017 3:28 AM GMT)
வெயில் காலத்தில் கேழ்வரகை அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகு, உருளைக்கிழங்கு வைத்து சத்துநிறைந்த பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
கோதுமை மாவு - 1 கப்
ராகி மாவு - 1 கப்
எண்ணெய், உப்பு - தேவைக்கு
தயிர் - 3 ஸ்பூன்
மசாலாவிற்கு :
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
ஓமம் - சிறிதளவு
மிளகாய் தூள் - சிறிதளவு
சீரகத்தூள் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் ராகி, கோதுமை மாவை போட்டு தயிர், சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து கொள்ளவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் வேக வைத்து இருக்கும் கிழங்கை மசித்து சேர்க்கவும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள், பெருங்காயம், ஓமம், மிளகாய் தூள், சீரகபொடி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து ஆறவைக்கவும்.
* தயார் செய்து வைத்து இருக்கும் ராகி கோதுமை மாவில் ஒரு உருண்டை எடுத்து கிண்ணம் போல் செய்து அதன் நடுவில் இந்த ஆலு மசாலாவை வைத்து மூடி பரோட்டாவாக உருட்டி வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்துள்ள பரோட்டாவை போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
* சத்தான ராகி ஆலு பரோட்டா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோதுமை மாவு - 1 கப்
ராகி மாவு - 1 கப்
எண்ணெய், உப்பு - தேவைக்கு
தயிர் - 3 ஸ்பூன்
மசாலாவிற்கு :
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
ஓமம் - சிறிதளவு
மிளகாய் தூள் - சிறிதளவு
சீரகத்தூள் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் ராகி, கோதுமை மாவை போட்டு தயிர், சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து கொள்ளவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் வேக வைத்து இருக்கும் கிழங்கை மசித்து சேர்க்கவும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள், பெருங்காயம், ஓமம், மிளகாய் தூள், சீரகபொடி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து ஆறவைக்கவும்.
* தயார் செய்து வைத்து இருக்கும் ராகி கோதுமை மாவில் ஒரு உருண்டை எடுத்து கிண்ணம் போல் செய்து அதன் நடுவில் இந்த ஆலு மசாலாவை வைத்து மூடி பரோட்டாவாக உருட்டி வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்துள்ள பரோட்டாவை போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
* சத்தான ராகி ஆலு பரோட்டா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X