search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்
    X

    உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்

    வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் இன்று கேழ்வரகு கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ராகி மாவு - 1 கப்
    தண்ணீர் - 3 + 1 கப்
    உப்பு - தேவைகேற்ப



    செய்முறை:

    * ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

    * 1 கப் தண்ணீரில் கேழ்வரகு மாவை கட்டியில்லாமல் கரைக்கவும்.

    * அடுப்பின் தணலை குறைத்து கரைத்த கேழ்வரகு மாவை கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி கட்டிதட்டாமல் கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும்.

    * நன்கு கெட்டியாக வந்தபின் இறக்கவும்.

    * சூப்பரான கேழ்வரகு கூழ் ரெடி.

    * ஆறியபின் தயிர் கலந்து மோர்மிளகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

    * வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் சத்தான உணவும் கூட.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×