search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் பீட்ரூட் ஜூஸ்
    X

    உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் பீட்ரூட் ஜூஸ்

    பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும். இன்று பீட்ரூட் ஜூஸ் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - 2
    புதினா இலை - சிறிதளவு
    பனை வெல்லம் - 2 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    பால் - 1/2 கப்
    ஏலக்காய் - 1
    இஞ்சி - சிறிய துண்டு
    எலுமிச்சை சாறு - சிறிதளவு


    செய்முறை :

    * பனை வெல்லத்தை பொடி செய்து கொள்ளவும்.

    * பீட்ரூட் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி, சிறிது தண்ணீரில் போட்டு வைக்கவும். பீட்ரூட்டின் நிறமெல்லாம் அந்தத் தண்ணீரில் இறங்கும்.

    * அந்த தண்ணீரோடு சேர்த்து பீட்ரூட் புதினா, ஏலக்காய், இஞ்சி, பனை வெல்லம், உப்பு சேர்த்து பால் ஊற்றி மிக்சியில் அரைக்கவும்.

    * அரைத்த ஜூஸை வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

    * சத்தான பீட்ரூட் ஜூஸ் ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×