என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த நெல்லிக்காய் சாதம்
Byமாலை மலர்21 March 2017 5:22 AM GMT (Updated: 21 March 2017 5:22 AM GMT)
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் புத்துணர்ச்சியோடும் இளமையாகவும் இருக்கலாம். இன்று நெல்லிக்காய் வைத்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய் - 6
சாதம் - 1 கப்
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - ½ தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தாளிக்க :
கடுகு - 1 தேக்கரண்டி
கடலைபருப்பு - ½ தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
வேர்கடலை - தேவைக்கு
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை :
* சாதத்தை ஒரு தட்டில் ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.
* பெரிய நெல்லிக்காயை கழுவி பொடியாகத் துருவிக் கொள்ள வேண்டும். கொட்டையை எடுத்து விடவேண்டும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின் உளுந்தம் பருப்பு, வேர்க்கடலை, கடலைப்பருப்பு இரண்டையும் போட்டு சிவக்க வறுத்த பின் கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளற வேண்டும். சிறிது நேரம் வதங்கியவுடன் (இரண்டு அல்லது மூன்று நிமிடம்) அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.
* அடுப்பிலிருந்து இறக்கிய நெல்லிக்காய் கலைவையை ஆற வைத்த சாதத்துடன் சோ்த்து கிளற வேண்டும் (சாதம் குலையாமல் கிளறவேண்டும்).
* விருப்பப்பட்டால் பொட்டுக் கடலையுடன், முந்திரி ஆகியவற்றை நெய்யில் வறுத்து கிளறிய சாதத்துடன் சோ்த்து பரிமாறலாம்.
* நெல்லிக்காய் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள புதினா சட்னி மிகுந்த சுவையாக இருக்கும்.
* இப்பொழுது சுவையான நெல்லிக்காய் சாதம் ரெடி
* நெல்லிக்காயைத் துருவும் போது மிகவும் பொடியாக துருவ வேண்டும். அப்படி பொடியாகத் துருவினால் சாதத்துடன் நன்றாக கலந்துவிடும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நெல்லிக்காய் - 6
சாதம் - 1 கப்
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - ½ தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தாளிக்க :
கடுகு - 1 தேக்கரண்டி
கடலைபருப்பு - ½ தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
வேர்கடலை - தேவைக்கு
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை :
* சாதத்தை ஒரு தட்டில் ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.
* பெரிய நெல்லிக்காயை கழுவி பொடியாகத் துருவிக் கொள்ள வேண்டும். கொட்டையை எடுத்து விடவேண்டும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின் உளுந்தம் பருப்பு, வேர்க்கடலை, கடலைப்பருப்பு இரண்டையும் போட்டு சிவக்க வறுத்த பின் கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளற வேண்டும். சிறிது நேரம் வதங்கியவுடன் (இரண்டு அல்லது மூன்று நிமிடம்) அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.
* அடுப்பிலிருந்து இறக்கிய நெல்லிக்காய் கலைவையை ஆற வைத்த சாதத்துடன் சோ்த்து கிளற வேண்டும் (சாதம் குலையாமல் கிளறவேண்டும்).
* விருப்பப்பட்டால் பொட்டுக் கடலையுடன், முந்திரி ஆகியவற்றை நெய்யில் வறுத்து கிளறிய சாதத்துடன் சோ்த்து பரிமாறலாம்.
* நெல்லிக்காய் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள புதினா சட்னி மிகுந்த சுவையாக இருக்கும்.
* இப்பொழுது சுவையான நெல்லிக்காய் சாதம் ரெடி
* நெல்லிக்காயைத் துருவும் போது மிகவும் பொடியாக துருவ வேண்டும். அப்படி பொடியாகத் துருவினால் சாதத்துடன் நன்றாக கலந்துவிடும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X