என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த தினை காய்கறி கிச்சடி
Byமாலை மலர்17 March 2017 5:26 AM GMT (Updated: 17 March 2017 5:26 AM GMT)
வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுதானிய உணவுகளை சாப்பிட வேண்டும். இன்று தினை, காய்கறிகள் வைத்து சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தினை ரவை - 250 கிராம்,
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தேவைக்கு
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
வெங்காயம் - 50 கிராம்,
தக்காளி - 50 கிராம்,
பச்சைமிளகாய் - 2,
கேரட், பீன்ஸ், பட்டாணி - 100 கிராம்,
புதினா - சிறிது,
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு,
தண்ணீர் - 750 மி.லி.,
சோம்பு - 20 கிராம்,
நெய் - சிறிது,
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்.
செய்முறை :
* தக்காளி, வெங்காயம், புதினா, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் நெய் விட்டு தினை ரவையை லேசாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள்தூள், உப்பு, தக்காளி, புதினா சேர்த்து வதக்கவும்.
* தக்காளி பாதியளவு வெந்ததும் கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வதக்கவும்.
* காய்கறிகள் நன்றாக வதங்கியதும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* கொதி வந்ததும் தினை ரவையை சேர்த்து, கெட்டியாகும் வரை மிதமான சூட்டில் கிளறி விடவும்.
* பிறகு கடாயை மூடிவைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும். சூடாக அலங்கரித்து பரிமாறவும்.
* தினை காய்கறி கிச்சடி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தினை ரவை - 250 கிராம்,
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தேவைக்கு
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
வெங்காயம் - 50 கிராம்,
தக்காளி - 50 கிராம்,
பச்சைமிளகாய் - 2,
கேரட், பீன்ஸ், பட்டாணி - 100 கிராம்,
புதினா - சிறிது,
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு,
தண்ணீர் - 750 மி.லி.,
சோம்பு - 20 கிராம்,
நெய் - சிறிது,
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்.
செய்முறை :
* தக்காளி, வெங்காயம், புதினா, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் நெய் விட்டு தினை ரவையை லேசாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள்தூள், உப்பு, தக்காளி, புதினா சேர்த்து வதக்கவும்.
* தக்காளி பாதியளவு வெந்ததும் கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வதக்கவும்.
* காய்கறிகள் நன்றாக வதங்கியதும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* கொதி வந்ததும் தினை ரவையை சேர்த்து, கெட்டியாகும் வரை மிதமான சூட்டில் கிளறி விடவும்.
* பிறகு கடாயை மூடிவைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும். சூடாக அலங்கரித்து பரிமாறவும்.
* தினை காய்கறி கிச்சடி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X