search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த தினை காய்கறி கிச்சடி
    X

    சத்து நிறைந்த தினை காய்கறி கிச்சடி

    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுதானிய உணவுகளை சாப்பிட வேண்டும். இன்று தினை, காய்கறிகள் வைத்து சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தினை ரவை - 250 கிராம்,
    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தேவைக்கு
    இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    வெங்காயம் - 50 கிராம்,
    தக்காளி - 50 கிராம்,
    பச்சைமிளகாய் - 2,
    கேரட், பீன்ஸ், பட்டாணி - 100 கிராம்,
    புதினா - சிறிது,
    எண்ணெய் - தேவைக்கு
    உப்பு - தேவையான அளவு,
    தண்ணீர் - 750 மி.லி.,
    சோம்பு - 20 கிராம்,
    நெய் - சிறிது,
    மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்.



    செய்முறை :

    * தக்காளி, வெங்காயம், புதினா, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் நெய் விட்டு தினை ரவையை லேசாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    * மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் மஞ்சள்தூள், உப்பு, தக்காளி, புதினா சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி பாதியளவு வெந்ததும் கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வதக்கவும்.

    * காய்கறிகள் நன்றாக வதங்கியதும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    * கொதி வந்ததும் தினை ரவையை சேர்த்து, கெட்டியாகும் வரை மிதமான சூட்டில் கிளறி விடவும்.

    * பிறகு கடாயை மூடிவைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும். சூடாக அலங்கரித்து பரிமாறவும்.

    * தினை காய்கறி கிச்சடி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×