search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த சிறுதானிய - தேங்காய்ப்பால் சூப்
    X

    சத்து நிறைந்த சிறுதானிய - தேங்காய்ப்பால் சூப்

    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று சிறுதானியங்களை வைத்து சத்து நிறைந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரை வாலி, வரகு, சாமை, தினை - 100 கிராம்,
    தேங்காய்ப்பால் - 1 கப்,
    பூண்டு - 4 பல்,
    மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
    நறுக்கிய பச்சைமிளகாய் - 2,
    சின்ன வெங்காயம் - 10,
    சீரகம் - 1/2 டீஸ்பூன்.

    செய்முறை :

    * சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அனைத்து சிறுதானியங்களையும் கழுவி சுத்தம் செய்து தண்ணீரில் ஊறவைத்து அரைக்கவும்.

    * தானியங்கள் ஊறிய தண்ணீரோடு அப்படியே அடுப்பில் வைத்து கஞ்சிப் பதத்திற்கு வரும்வரை வேக விடவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பச்சைமிளகாய், பூண்டு போட்டு தாளித்த பின் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது வதக்கவும்.

    * அடுத்து அதில் வேக வைத்த சிறுதானிய கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.

    * நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும்.

    * கடைசியாக அதில் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்.

    * சத்து நிறைந்த சிறுதானிய - தேங்காய்ப்பால் சூப் ரெடி.

    * இதில் காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×