search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த கம்பு பருப்பு சாதம்
    X

    சத்து நிறைந்த கம்பு பருப்பு சாதம்

    சிறுதானிய உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று கம்பு, பருப்பு வைத்து சத்தான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பரிசி - ஒரு கப்
    துவரம்பருப்பு - கால் கப்
    பாசி பயிறு - கால் கப்
    தண்ணீர் - 3 கப்
    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
    மிளகாய்தூள் - அரை ஸ்பூன்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    உப்பு - தேவைக்கேற்ப
    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது

    தாளிக்க :

    எண்ணெய் - 2 ஸ்பூன்
    கடுகு - அரை ஸ்பூன்

    பொடிக்க  :

    மிளகு - அரை ஸ்பூன்
    சீரகம் - அரை ஸ்பூன்
    மிளகாய் வற்றல் - 2
    பூண்டு - 4

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    * கம்பரிசியும், பருப்பு வகைகளையும் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    * மிளகு, சீரகம், மிளகாய் வற்றலை மிக்ஸியில் பொடித்து கடைசியில் பூண்டு சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுக்கவும்.

    * குக்கரில் எண்ணெய் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த பொடி சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் தண்ணீரும் உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

    * தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசி, பருப்பு, கொத்தமல்லி தழையும் சேர்த்து 5 விசில் போட்டு வேகவிடவும்.

    * சத்தான கம்பு பருப்பு சாதம் ரெடி.

    * தேங்காய் துவையல், தயிர், ஊறுகாயுடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×