என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான அரிசி - தேங்காய் பால் சீரக கஞ்சி
Byமாலை மலர்3 Dec 2016 5:06 AM GMT (Updated: 3 Dec 2016 5:06 AM GMT)
சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு உகந்த அரிசி - தேங்காய் பால் சீரக கஞ்சி செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சை அரிசி - 1 கப்
சீரகம் - 2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
மஞ்சள் - 2 துண்டு
உப்பு - அளவிற்கு
தண்ணீர் - 4 கப்
தேங்காய் துருவல் - கால் கப்
தாளிக்க :
சீரகம் - அரை ஸ்பூன்
நெய் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
செய்முறை :
* மிக்சியில் தேங்காய் துருவலை போட்டு நன்றாக அரைத்து எடுத்து அதனுடன் 1 கப் தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு பாலை பிழிந்தெடுத்து வைக்கவும்.
* சீரகம், மிளகு, மஞ்சள் மூன்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த மஞ்சள் விழுதை தேங்காய் பாலில் கரைத்து வைக்கவும்.
* அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அரிசியை கழுவி போட்டு வேக விடவும்.
* அரிசி முக்கால் பதமாக வெந்த பின்பு, கரைத்து வைத்துள்ள தேங்காய் பால், அளவுக்கு உப்பு போட்டு மூடி வேகவிடவும்.
* கஞ்சி நன்றாக கொதித்து வெந்து வாசனை வரத் தொடங்கியதும் கறிவேப்பிலை, சீரகத்தை நெய்யில் தாளித்து அதில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி சூட்டுடனே பரிமாறினால் அதிக சுவையாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சை அரிசி - 1 கப்
சீரகம் - 2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
மஞ்சள் - 2 துண்டு
உப்பு - அளவிற்கு
தண்ணீர் - 4 கப்
தேங்காய் துருவல் - கால் கப்
தாளிக்க :
சீரகம் - அரை ஸ்பூன்
நெய் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
செய்முறை :
* மிக்சியில் தேங்காய் துருவலை போட்டு நன்றாக அரைத்து எடுத்து அதனுடன் 1 கப் தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு பாலை பிழிந்தெடுத்து வைக்கவும்.
* சீரகம், மிளகு, மஞ்சள் மூன்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த மஞ்சள் விழுதை தேங்காய் பாலில் கரைத்து வைக்கவும்.
* அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அரிசியை கழுவி போட்டு வேக விடவும்.
* அரிசி முக்கால் பதமாக வெந்த பின்பு, கரைத்து வைத்துள்ள தேங்காய் பால், அளவுக்கு உப்பு போட்டு மூடி வேகவிடவும்.
* கஞ்சி நன்றாக கொதித்து வெந்து வாசனை வரத் தொடங்கியதும் கறிவேப்பிலை, சீரகத்தை நெய்யில் தாளித்து அதில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி சூட்டுடனே பரிமாறினால் அதிக சுவையாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X