என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வரகு சாம்பார் சாதம் செய்வது எப்படி
Byமாலை மலர்22 Sep 2016 6:12 AM GMT (Updated: 22 Sep 2016 6:12 AM GMT)
சிறுதானிங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கும் மிகவும் நல்லது. வரகு அரிசியில் சாம்பார் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வரகு அரிசி - 1 குவளை (100 gms)
துவரம் பருப்பு - 1/4 குவளை (30 gms)
தண்ணீர் - 3 குவளை
காய்கறிகள் - ஏதாவது 4 அல்லது 5 வகை (மொத்தம் 200 gms)
தக்காளி - 3 (நடுத்தர அளவு)
சிறிய வெங்காயம் - 100 கிராம்
நல்லெண்ணை - 1 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
பச்சை மிளகாய் - 1
பெருங்காயம் - 2 சிட்டிகைகள்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - சுவைக்கேற்ப
சாம்பார் சாத மசாலா தயாரிக்க :
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
வெந்தயம் - ¼ தேக்கரண்டி
கடுகு - ¼ தேக்கரண்டி
பட்டை - 1 துண்டு (1/2 இன்ச் நீளமுள்ளது)
கிராம்பு - 3
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை :
* ஒரு வாணலியில் சாம்பார் சாதம் மசாலா பொடி தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக அதே வரிசையில் போட்டு வறுத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு அவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, அந்தப் பொடியை தனியே வைக்கவும்.
* வரகரிசியையும், துவரம் பருப்பையும் தனித்தனியே 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
* கொத்தமல்லி தழை, காய்கறிகள், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின் சிறிய (சாம்பார்) வெங்காயம், முழு பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
* அடுத்து தக்காளியுடன், மஞ்சள் பொடி, பெருங்காயம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
* இப்போது அனைத்து காய்கறிகள், வரகரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து நீரை ஊற்றி வேக வைக்கவும். முதல் விசில் வந்த பிறகு, தீயை குறைத்து 8 நிமிடங்கள் காத்திருந்து, பின் அடுப்பை அணைக்கவும்.
* குக்கர் ஆவி போன பிறகு, மூடியைத் திறந்து சாம்பார் சாத மசாலா பொடியை சேர்த்துக் கலக்கவும். குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து 2 நிமிடங்கள் வேக விடவும். பின் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைக்கவும்.
* சாதத்தின் மீது காராபூந்தி அல்லது உருளைக் கிழங்கு வருவல் சேர்த்து சாப்பிடவும்.
குறிப்பு:
* வரகுக்கு பதிலாக, குதிரைவாலி, திணை மற்றும் சாமை அரிசிகளையும் பயன்படுத்தலாம்.
* உங்களுக்கு விருப்பமான ஏதாவது 4 அல்லது 5 வகை காய்கறிகளை பயன்படுத்தலாம். ஆனால் அந்த காய்கள் விரைவிலேயே குழையக் கூடிய தன்மை இல்லாததாக இருப்பது நல்லது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X