search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குடல் புண்ணை ஆற்றும் புடலங்காய்
    X

    குடல் புண்ணை ஆற்றும் புடலங்காய்

    புடலங்காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். புடலங்காயில் உள்ள முக்கிய மருத்துவ பயன்கள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
    புடலங்காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள்.
     
    புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள காயே பயன்படுத்த வேண்டும்.
     
    * விந்துவை கெட்டிபடுத்தும். ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது புடலங்காய் காமத்தன்மை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு.
     
    * அஜீரண கோளாறு அகன்று, எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.
     
    * குடல் புண்ணை ஆற்றும். வயிற்று புண், தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்.
     
    * இதில் நார் சத்து அதிகம் இருப்பதால் மலசிக்கலை போக்கும் தன்மை உடையாதாக இருக்கிறது.
     
    * மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது.
     
    * நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிகிறது.
     
    * பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைபடுதலை குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கண் பார்வையே அதிகரிக்க செய்கிறது.
     
    9. இதில் அதிகம் நீர்சத்து இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
     
    10. வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.
    Next Story
    ×