search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முறையான உணவு பழக்கம் எது தெரியுமா?
    X

    முறையான உணவு பழக்கம் எது தெரியுமா?

    ஆரோக்கியமாக வாழ முறையான உணவு பழக்கத்தை எப்படி பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    கண்ட நேரத்தில் கண்டபடி சாப்பிடுவது என்பது வேலைக்குச் செல்லும் பலருக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகின்றது. ஆனால் இன்றைய இளைய சமுதாயத்தினர் அநேக நேரம் கெட்ட உணவினையே தன் வாழ்க்கை முறையாக ஆக்கி வருகின்றனர். காலையில் தண்ணி கூட குடிக்காமல், பட்டினியாய் பள்ளி, கல்லூரி செல்வதும், இரவில் டி.வி. முன் அமர்ந்து சிப்ஸ், சமோஸா, குளிர்பானம் என விடாது உண்பதும் தான் நாகரீக வாழ்க்கை என வாழும் இளைய சமுதாயத்தினர் பலர் உள்ளனர்.

    காலை உணவினை 11-12 மணிக்கு உண்பதும், மதிய உணவினை 3 மணிக்கும் இரவு உணவினை 11 மணிக்கும் என உண்பவர்கள் அநேகர் உள்ளனர்.

    காலை உணவினை அடியோடு தவிர்த்து டீ, காபி கொண்டு சமாளிப்பவர்களும் அநேகர் உண்டு. இரவு ஓட்டல்களில் ஒரு மணி, இரண்டு மணி வரை உண்ணும் நாகரீக மோகமும் இருக்காது. இரவு வரும் பொழுது உடல் ஓய்வெடுக்க பழக்கப்பட்ட நிலையைக் கொண்டது. ஆனால் நாம் நம்மால் எந்த நேரமும் எப்படி உண்டாலும் எனக்கு ஒன்றும் செய்யாது என்ற தவறான எண்ணத்தில் உள்ளோம். இதுவே நீரிழிவு பிரிவு 2 உண்டாகக் காரணமாகின்றது.

    இத்தகு பழக்கம் எடை கூடுவதற்கு மிகப்பெரிய காரணமாக இருப்பதாக இன்றைய ஆய்வு உணர்த்துகிறது. இவ்வாறு இரவில் நேரம் கழித்து சாப்பிடுபவர்கள் நடு நிசியில் சாப்பிடுபவர்கள் இவர்களின் ஞாபகசக்தி மந்தப்படுகின்றது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. இதனை அனைவரும் நினைவில் வைத்து இன்றிலிருந்தே உணவு பழக்க முறையினை மாற்றினாலே வருங்கால இந்தியா ஆரோக்கியமான நபர்களைக் கொண்ட இந்தியா ஆகி விடும்.

    ஷிப்ட் முறையில் வேலை செல்பவர்களுக்கு முறையான நேர உணவு என்பது மிகவும் கடினம். இவர்கள் புரதச் சத்து கொண்ட ஏதாவது ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உங்கள் உணவினை தவிர்க்காதீர்கள். ஒரு டீ, காபி, குளிர்பானம் இவற்றினைக் குடித்துவிட்டு உணவினைத் தவிர்க்காதீர்கள். 

    பகல் உணவு என்பது 11-1 மணிவரைதான் என்பதெல்லாம் உங்களுக்கு சரிபடாது. பசிக்கும் பொழுது சாப்பிடுங்கள். ஆனால் இரவில் வெகு நேரம் சென்று சாப்பிடுவது, நடுநிசியில் சாப்பிடுவது இதனை மட்டும் தவிர்த்துவிடுங்கள். இதனால் பல இளைய தலைமுறையினரிடம் குறிப்பாக பெண்களிடம் ஒரு பிரச்சினை இருக்கின்றது.

    * வைத்த உணவை தட்டினில் கிளறிக் கொண்டே இருப்பார்கள்.
    * கலகலப்பாக இல்லாது தனித்து இருப்பார்கள்.
    * மிக ஒல்லியாக இருந்தாலும் எடை கூடுவதனைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்.
    * அடிக்கடி ஏதாவது உடற்பயிற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.
    * உடல் வலுவிழந்து மாதவிடாய் கூட இராது.
    * உடல் வெளிரி, முடி வறண்டு இருக்கும்.
    * தனியே உண்கிறேன் என்று ஒதுங்குவார்கள்.
    * அசிடிடி பிரச்சனை அதிகமாய் இருக்கும்.

    இத்தகு பிரச்சனை உடையவர்களுக்கு அவசியம் இன்னும் சிலர் எடையை பற்றி பயந்து கொண்டே அதிகம் சாப்பிடுவார்கள். சில முறையில்லாத வழிகளை கையாளுவார்கள். இவர்களுக்கும் உடனடி மருத்துவ உதவி தேவை. மூன்று நேர உணவு மூன்று சிறிய ஸ்நாக்ஸ் என்பது பொதுவில் கடைபிடிக்கப்படுகின்றது. 

    ஒரே நேர அதிக அளவு உணவு அல்லது சத்தற்ற உணவு என்பது கூடாது. உணவில் பழங்கள், சுண்டல் போன்றவற்றினை ஸ்நாக்ஸ் முறையில் பயன்படுத்தலாம். முழு தானிய உணவு காய்கறிகள் இவையே முறையான உணவாக பரிந்துரைக்கப்படுகின்றது. நார் சத்து உணவும் மிக அவசியம் என்பது வலியுறுத்தப்படுகின்றது.

    முறையற்ற உணவு பழக்க முடையோரின் அறிகுறிகள் :

    . உடல் மெலிவதோ கூடுவதோ நன்கு தெரியும்
    . மிக சீக்கிரம் பருவமடைதல்
    . வயதின் அளவிற்கு மீறிய வளர்ச்சி
    . உணவு கட்டுப்பாட்டினைப் பற்றி எப்பொழுதும் பேசுதல்
    . திடீரென சைவ உணவுக்கு மாறுதல்
    . ஐஸ்கிரீம்களை தவிர்த்தல்
    . உணவுநேரத்தில் உண்ணாதிருத்தல், குறிப்பாக காலை உணவினை தவிர்த்தல்
    . அதிக தண்ணீர், டயட் சோடா, காபி பருகுதல்
    . வயிறு உப்பிசம், வாந்தி, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினை களை அடிக்கடி கூறுதல்
    . உணவு சாப்பிடு வதனைப் பற்றி பொய் கூறுதல்
    . தன்னைப் பற்றி குறைவாய் மதிப்பிடுதல்
    . முடி மெலிந்து வறண்டு இருத்தல்
    . மயக்கம்
    . நெஞ்செரிச்சல்
    . வாயைச் சுற்றி சிவந்து இருத்தல்
    . அதிக பல் சொத்தை
    . வேகமாக சாப்பிடுதல்
    . தனியாய் சாப்பிடுதல்
    . பசிக்கும் பொழுது சாப்பிடாது இருத்தல்
    . உணவு கட்டுபாடு செய்வேன் எனச் சொல்லி செய்ய முடியாது இருத்தல்.

    இவை அனைத்தும் இருந்தால் மருத்துவ உதவி மற்றும் குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு பாதிக்கப்பட்ட நபருக்கு மிக அவசியம்.

    சிறந்த முறை உணவு பழக்க குறிப்புகள் 

    பசி மயக்கம் வரும் வரை சாப்பிடாது இருக்காதீர்கள். சிலர் பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகள் உலர் திராட்சை, ஒரு சிறு கப் தயிர் போன்ற ஏதாவது கைவசம் இருக்கட்டும்.

    இன்று அநேகர் கலோரி அளவில் கவனம் செலுத்துகின்றனர். வயது, வேலை இவற்றினை பொறுத்து உங்கள் உணவினை பழம், காய்கறிகள், கொழுப்பு குறைந்த பால் வகை உணவுகள் முழுதானிய உணவு என்பதனை உங்களுக்கு உண்மையாக வரையறுத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு உணவில் சிகப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு இந்த நிறம் கொண்டவை இருக்க வேண்டும். இதனை ஒவ்வொரு முறை உண்ணும் பொழுதும் கவனத்தில் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை உண்ணும் பொழுதும் இன்னும் கொஞ்சம் தேவை எனும் பொழுது நிறுத்திக் கொள்ளுங்கள்.

    6-8 கிளாஸ் நீர் அவசியம்.
    சிப்ஸ், ஊறுகாய், அதிக உப்பு இவற்றினை தவிருங்கள்.
    உணவில் சற்று சிகப்பு மிளகாய் காரம் இருந்தால் உண்ட திருப்தி இருக்கும். 
    டயட் சோடா வினைத் தவிருங்கள்.
    கொழுப்பு இல்லாத சூப் அன்றாட உணவில் இருக்க வேண்டும்.
    பரபரவென்று சாப்பிட்டு முடிக்காதீர்கள். 20 நிமிடங்கள் உண்பதற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
    பார்ட்டிக்கு செல்வதென்றால் அதற்கு முன்பாகவே சாப்பிட்டு விடுங்கள். அப்பொழுதுதான் மனம் போனபடி பார்ட்டியில் சாப்பிட மாட்டீர்கள்.

    ஒரு சிறிய ஸ்வீட்டினை, ஐஸ்கிரீமினை 20 நிமிடம் எடுத்து சாப்பிடுங்கள். நன்கு தூங்குங்கள்.

    * திடீரென உங்கள் முறையற்ற உணவு பழக்கத்தினை மாற்றிக் கொள்வது கடினமாக இருக்கலாம். ஆனால் கைவிட்டு விடாதீர்கள். குறுகிய காலத்தில் முறையான பழக்கத்திற்கு மாறி விடுவீர்கள்.

    * ஒரு தட்டில் பாதியளவு பழங்களும், காய்கறிகளும் இருக்க வேண்டும்.

    * இட்லி, தோசை, பொங்கல், சாதம் என உங்கள் உணவு அரிசியை மட்டுமே சுற்றி இருக்கக்கூடாது.

    * காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்காதீர்கள்.

    * பொதுவில் காலையில் மகாராஜாவினைப் போலவும், மதியம் இளவரசனைப் போலவும், இரவில் கருமியினைப் போலவும் உண்ண வேண்டும் என்ற பழமொழி உண்டு. ஆனால் காலையில் அவ்வாறு முடியாது. எனவே மதிய உணவில் காய்கறிகள், பழங்கள், கொழுப்பு குறைந்த பால் வகை என உணவு உட்கொள்ளுங்கள்.

    * உணவு என்பது மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கே. அது ஒரு சுமையாகவும், கவலை யாகவும் ஆகிவிடக் கூடாது என்பதனை உணருங்கள்.
    Next Story
    ×