என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைக்கு ஒரு வயதிற்குள் பசும்பால் கொடுக்கலாமா?
Byமாலை மலர்24 Sep 2016 5:27 AM GMT (Updated: 24 Sep 2016 5:27 AM GMT)
குழந்தைக்கு ஒரு வயதிற்குள் பசும்பால் கொடுக்கலாமா? என்ற சந்தேகம் அனைவரும் உள்ளது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அனேக தாய்மார்களுக்கு இருக்கும் சந்தேகம் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கலாமா வேண்டாமா என்பது தான். எந்த மாதத்தில் இருந்து கொடுக்க வேண்டும்? செரிமானம் ஆகுமா? என்றெல்லாம் மனதில் கேள்வி எழும்.
பொதுவாக மருத்துவர்கள் ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும், ஒரு சொட்டு தண்ணீர்கூட தரக்கூடாது என கண்டிப்புடன் சொல்வார்கள்.
ஆறு மாதம் முடிவடைந்த பின்னர் திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கலாம். அத்துடன் சிறிதளவு பசும்பாலும் கொடுக்கலாம், பசும்பாலில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.
புரோட்டீன், கார்போஹைட்ரேட், விட்டமின்கள், கால்சியம் இருப்பதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. வாழ்க்கையின் பிற்காலங்களில், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்துகளை இது குறைக்கிறது.
எனினும் மருத்துவரின் ஆலோசனையின்படி அளவாக கொடுக்கவும், அளவுக்கு அதிகமாக கொடுக்கும் பட்சத்தில் அதுவே ரத்தசோகை வரவும் காரணமாகும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X