search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட போது எடுத்த படம்.
    X
    ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட போது எடுத்த படம்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் வஸ்திர மரியாதை

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை நேற்று காலை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தது.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலை தொடுக்கும் தொண்டு செய்து அவருக்கு மனைவியானார். ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்த உறவும், மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் இருந்து வந்தது.

    இதையடுத்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கவுள்ளதை முன்னிட்டு நேற்று காலை 6.30 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட ஆண்டாள் அணிந்த மாலை, பட்டு வஸ்திரங்கள், மலர்கள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட கிளிகள், பழங்கள் உள்ளிட்ட மங்கள பொருட்கள் ரங்கவிலாச மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.



    பின்னர் அவை மேளதாளத்துடன் யானை மீது வைத்து உத்திரை வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி ராமராஜன், ரமேஷ் பட்டர் உள்ளிட்ட குழுவினர் வஸ்திரமரியாதையை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் மற்றும் கோவில் நிர்வாகிகளிடம் அளித்தனர்.

    இன்று சித்திரை தேரோட்டத்தின் போது தேரில் எழுந்தருளும் பெருமாள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்களை அணிந்து தேரோட்டம் கண்டருளுகிறார்.
    Next Story
    ×