என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா 29-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்21 April 2017 8:13 AM GMT (Updated: 21 April 2017 8:13 AM GMT)
நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நெல்லை சந்திப்பு குறுக்குத்துறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 11 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
வருகிற 5-ந் தேதி காலை உருகு சட்ட சேவையும், மாலையில் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தி நெல்லை மாநகருக்கு எழுந்தருளுகிறார். 6-ந் தேதி காலை வெள்ளை சாத்தியும், இரவில் பச்சை சாத்தியும் கோவிலை வந்து அடைகிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 8-ந் தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. 9-ந் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் சங்கர நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
வருகிற 5-ந் தேதி காலை உருகு சட்ட சேவையும், மாலையில் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தி நெல்லை மாநகருக்கு எழுந்தருளுகிறார். 6-ந் தேதி காலை வெள்ளை சாத்தியும், இரவில் பச்சை சாத்தியும் கோவிலை வந்து அடைகிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 8-ந் தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. 9-ந் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் சங்கர நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X