என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ராமானுஜரின் 1000-வது அவதார தினவிழா
Byமாலை மலர்21 April 2017 6:55 AM GMT (Updated: 21 April 2017 6:55 AM GMT)
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ராமானுஜரின் 1000-வது அவதார தின விழா நேற்று நடைபெற்றது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ராமானுஜரின் 1000-வது அவதார தின விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள், ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை மற்றும் வேத பாராயண அருள்செயல் கோஷ்டி சேவித்தலும் நடைபெற்றது.
பின்னர் மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜபெருமாள் தங்க கருடசேவையும், ராமானுஜர் சேஷவாகனத்தில் எதிர்சேவையும் மற்றும் வேத பாராயண கோஷ்டியுடன் திருவீதி உலாவும் நடைபெற்றது.
இதில் திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரியார் சாமிகள், சோளசிம்ஹபுரம் கோவில் கந்தாடை சண்டமாருதம் குமார தொட்டையாசாரிய சுவாமிகள், ஸ்ரீ வில்லிப்புத்தூர் பரமஹம்சசேத்யாதி 24-வது பட்டம், சடகோப ராமானுஜாச்சாரியார் ஜீயர் சுவாமிகள், ராஜமன்னார்குடி பரமஹம்சசேத்யாதி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி, தக்கார் கோவிந்தசாமி, தலைமை எழுத்தர் ஆழ்வார் ஆகியோர் செய்து இருந்தனர்.
பின்னர் மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜபெருமாள் தங்க கருடசேவையும், ராமானுஜர் சேஷவாகனத்தில் எதிர்சேவையும் மற்றும் வேத பாராயண கோஷ்டியுடன் திருவீதி உலாவும் நடைபெற்றது.
இதில் திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரியார் சாமிகள், சோளசிம்ஹபுரம் கோவில் கந்தாடை சண்டமாருதம் குமார தொட்டையாசாரிய சுவாமிகள், ஸ்ரீ வில்லிப்புத்தூர் பரமஹம்சசேத்யாதி 24-வது பட்டம், சடகோப ராமானுஜாச்சாரியார் ஜீயர் சுவாமிகள், ராஜமன்னார்குடி பரமஹம்சசேத்யாதி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி, தக்கார் கோவிந்தசாமி, தலைமை எழுத்தர் ஆழ்வார் ஆகியோர் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X