search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாளை சித்திரை புத்தாண்டு வழிபாட்டு முறை
    X

    நாளை சித்திரை புத்தாண்டு வழிபாட்டு முறை

    நாளை தொடங்கும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வீட்டில் வழிபாடு செய்ய வேண்டிய வழிமுறைகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    சித்திரை முதல் தினத்தன்று வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். வாசல் படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும். வாசல்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி, மெழுகி, கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும்.

    மஞ்சள், குங்குமம் ஆகிய இரண்டு நோய்க் கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும்.
    விசிறி தானம் செய்யும்

    சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பார். ஆகையால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும்.

    Next Story
    ×