search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தென்தாமரைகுளம் பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    தென்தாமரைகுளம் பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    தென்தாமரைகுளம் இந்து நாடார் சமுதாயத்துக்கு உட்பட்ட பத்திரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    தென்தாமரைகுளம் இந்து நாடார் சமுதாயத்துக்கு உட்பட்ட பத்திரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி அதிகாலையில் பெரியம்மனுக்கு பூஜை, பத்திரகாளி அம்மன் திருநடை திறப்பு, விளக்கு ஏற்றுதலும், காலை 8 மணிக்கு கணபதி பூஜை, யாகசாலை பூஜையும் நடந்தது. இதனையடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகக்குழு தலைவர் துரைலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜன், பொருளாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பாபிஷேகத்திற்கு பிறகு அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் நடந்த சமபந்தி விருந்தை சென்னை தொழிலதிபர் டாக்டர் சி.என்.ராஜதுரை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து 2 நாட்கள் கொடை விழா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×