என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்28 March 2017 4:31 AM GMT (Updated: 28 March 2017 4:31 AM GMT)
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில், முத்து மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில், முத்து மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. முதல்நாள் கொடியேற்றம், கரகம் அழைத்தலும், இரவு அம்மன் கேடயத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
2-வது நாள் பூச்சப்பரத்திலும், 3-வது நாள் சிம்ம வாகனத்திலும், 4-வது நாள் காளை வாகனத்திலும், 5-வது நாள் யானை வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதேபோல், 6-வது நாள் அன்ன வாகனத்திலும், 7-வது நாள் சேஷ வாகனத்திலும், 8-வது நாள் குதிரை வாகனத்திலும், 9-வது நாள் பூப்பல்லக்கிலும், 10-வது நாள் குதிரை வாகனத்திலும் அம்மன் ஊர்வலமாக வருகிறார்.
விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம், பொங்கல் வைத்தல், சந்தனக்குடம் எடுத்து வருதல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர். இதையடுத்து அம்மன் பூஞ்சோலை அடைதலுடன் திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் தங்கப்பாண்டி, செயலாளர் காசிப்பாண்டி, பொருளாளர் ராமகிருஷ்ணன் மற்றும் விழா நிர்வாக குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
2-வது நாள் பூச்சப்பரத்திலும், 3-வது நாள் சிம்ம வாகனத்திலும், 4-வது நாள் காளை வாகனத்திலும், 5-வது நாள் யானை வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதேபோல், 6-வது நாள் அன்ன வாகனத்திலும், 7-வது நாள் சேஷ வாகனத்திலும், 8-வது நாள் குதிரை வாகனத்திலும், 9-வது நாள் பூப்பல்லக்கிலும், 10-வது நாள் குதிரை வாகனத்திலும் அம்மன் ஊர்வலமாக வருகிறார்.
விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம், பொங்கல் வைத்தல், சந்தனக்குடம் எடுத்து வருதல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர். இதையடுத்து அம்மன் பூஞ்சோலை அடைதலுடன் திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் தங்கப்பாண்டி, செயலாளர் காசிப்பாண்டி, பொருளாளர் ராமகிருஷ்ணன் மற்றும் விழா நிர்வாக குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X