என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவெள்ளறை பெருமாள் கோவில் தேரோட்டம்
Byமாலை மலர்25 March 2017 7:45 AM GMT (Updated: 25 March 2017 7:45 AM GMT)
திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தேவஸ்தானத்தை சேர்ந்தது திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி காலை கொடியேற்றம் நடைபெற்றது. இரவில் பெருமாள் தாயாருடன் புறப்பாடும், பின்னர் தாயார் சன்னதியில் திருமஞ்சனமும் நடைபெற்றது.
கடந்த 18-ந் தேதி பெருமாள், தாயாருடன் கோவிலில் இருந்து புறப்பட்டு பூனாம்பாளையம், மண்ணச்சநல்லூர், நொச்சியம் ஆகிய ஊர்களில் வழிநடை உபயங்கள் கண்டு, அதன் பின்னர் கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருளினார். விழா நாட்களில் கற்பக விருட்ச வாகனம் அனுமந்த வாகனம், கருட வாகனம், ஹம்ச வாகனம், சேஷ வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், பூந்தேர் ஆகியவற்றில் தாயாருடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று முன்தினம் பெருமாள் வழிநடை உபயங்கள் கண்டருளி குசஹஸ்திக்கரையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் பெருமாள் தாயாருடன் எழுந்தருளினார். இரவில் குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெற்று திருவீதி வலம் வந்து வையாளி கண்டருளி அனந்தராயர் மண்டபத்திற்கு வந்தடைந்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பாடு நடைபெற்று, 7.30 மணியளவில் தேரில் பெருமாள், பங்கஜவள்ளி தாயாருடன் எழுந்தருளினார். காலை 10.45 மணியளவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து தேர் நிலையை அடைந்தது.
விழாவில் திருவெள்ளறை, பூனாம்பாளையம், தீராம்பாளையம், காளவாய்ப்பட்டி, காட்டுக்குளம் உள்பட பல்வேறு கிராமத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு தண்ணீரும், அன்னதானமும் வழங்கப்பட்டது. தேருக்கு முன்னால் மாணவிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர்.
10-ம் நாளான இன்று(சனிக்கிழமை) சப்தாவரணம் திருவீதி புறப்பாடும், 11-ம் திருநாளான நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆளும் பல்லக்கில் பெருமாள் திருவீதி புறப்பாடும் நடைபெற உள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் ரெத்தினவேல் ஆகியோர் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
கடந்த 18-ந் தேதி பெருமாள், தாயாருடன் கோவிலில் இருந்து புறப்பட்டு பூனாம்பாளையம், மண்ணச்சநல்லூர், நொச்சியம் ஆகிய ஊர்களில் வழிநடை உபயங்கள் கண்டு, அதன் பின்னர் கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருளினார். விழா நாட்களில் கற்பக விருட்ச வாகனம் அனுமந்த வாகனம், கருட வாகனம், ஹம்ச வாகனம், சேஷ வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், பூந்தேர் ஆகியவற்றில் தாயாருடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று முன்தினம் பெருமாள் வழிநடை உபயங்கள் கண்டருளி குசஹஸ்திக்கரையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் பெருமாள் தாயாருடன் எழுந்தருளினார். இரவில் குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெற்று திருவீதி வலம் வந்து வையாளி கண்டருளி அனந்தராயர் மண்டபத்திற்கு வந்தடைந்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பாடு நடைபெற்று, 7.30 மணியளவில் தேரில் பெருமாள், பங்கஜவள்ளி தாயாருடன் எழுந்தருளினார். காலை 10.45 மணியளவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து தேர் நிலையை அடைந்தது.
விழாவில் திருவெள்ளறை, பூனாம்பாளையம், தீராம்பாளையம், காளவாய்ப்பட்டி, காட்டுக்குளம் உள்பட பல்வேறு கிராமத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு தண்ணீரும், அன்னதானமும் வழங்கப்பட்டது. தேருக்கு முன்னால் மாணவிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர்.
10-ம் நாளான இன்று(சனிக்கிழமை) சப்தாவரணம் திருவீதி புறப்பாடும், 11-ம் திருநாளான நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆளும் பல்லக்கில் பெருமாள் திருவீதி புறப்பாடும் நடைபெற உள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் ரெத்தினவேல் ஆகியோர் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X