என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவெள்ளறை பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது
Byமாலை மலர்24 March 2017 7:50 AM GMT (Updated: 24 March 2017 7:50 AM GMT)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்தது திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்தது திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி காலை 5.45 மணியளவில் கும்ப லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
அன்று இரவு 7.15 மணியளவில் பெருமாள் தாயாருடன் புறப்பாடு நடைபெற்றது. தாயார் சன்னதியில் இரவு 8 மணியளவில் திருமஞ்சனம் நடைபெற்றது. இரண்டாம் திருநாளான 17-ந் தேதி காலை 5.30 மணியளவில் கற்பக விருட்சத்தில் புறப்பாடு நடைபெற்றது. மாலை 6.30 மணியளவில் அனுமந்த வாகனத்தில் புறப்பாடும், திருவீதி உலாவும் நடைபெற்றது.
கடந்த 18-ந் தேதி அதிகாலை 1.30 மணியளவில் பெருமாள் தாயாருடன் கோவிலில் இருந்து புறப்பட்டு பூனாம்பாளையம், மண்ணச்சநல்லூர், நொச்சியம் ஆகிய ஊர்களில் வழிநடை உபயங்கள் கண்டு அதன் பின்னர் கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருளினார்.
19-ந் தேதி இரவு கருட வாகனத்திலும், 20-ந் தேதி ஹம்ச வாகனத்திலும் சேஷ வாகனத்திலும் புறப்பாடு நடைபெற்றது. 21-ந் தேதி சிம்ம வாகனத்திலும், யானை வாகனத்திலும் புறப்பாடு நடைபெற்றது. 22-ந் தேதி காலை 7 மணியளவில் நெல்லளவு கண்டருளினார். அன்று இரவு 8 மணியளவில் பூந்தேரில் புறப்பாடு நடைபெற்றது.
நேற்று பகல் 11 மணியளவில் வழிநடை உபயங்கள் கண்டருளி குசஹஸ்திக்கரையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் பெருமாள் தாயாருடன் எழுந்தருளினார். இரவு 7.30 மணியளவில் குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெற்று திருவீதி வலம் வந்து வையாளி கண்டருளி அனந்தராயர் மண்டபத்திற்கு வந்தடைந்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. 10-ம் திருநாளான 25-ந் தேதி சப்தாவரணம் திருவீதி புறப்பாடும், 11-ம் திருநாளான 26-ந் தேதி ஆளும் பல்லக்கில் திருவீதி புறப்பாடும் நடைபெற உள்ளது.
அன்று இரவு 7.15 மணியளவில் பெருமாள் தாயாருடன் புறப்பாடு நடைபெற்றது. தாயார் சன்னதியில் இரவு 8 மணியளவில் திருமஞ்சனம் நடைபெற்றது. இரண்டாம் திருநாளான 17-ந் தேதி காலை 5.30 மணியளவில் கற்பக விருட்சத்தில் புறப்பாடு நடைபெற்றது. மாலை 6.30 மணியளவில் அனுமந்த வாகனத்தில் புறப்பாடும், திருவீதி உலாவும் நடைபெற்றது.
கடந்த 18-ந் தேதி அதிகாலை 1.30 மணியளவில் பெருமாள் தாயாருடன் கோவிலில் இருந்து புறப்பட்டு பூனாம்பாளையம், மண்ணச்சநல்லூர், நொச்சியம் ஆகிய ஊர்களில் வழிநடை உபயங்கள் கண்டு அதன் பின்னர் கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருளினார்.
19-ந் தேதி இரவு கருட வாகனத்திலும், 20-ந் தேதி ஹம்ச வாகனத்திலும் சேஷ வாகனத்திலும் புறப்பாடு நடைபெற்றது. 21-ந் தேதி சிம்ம வாகனத்திலும், யானை வாகனத்திலும் புறப்பாடு நடைபெற்றது. 22-ந் தேதி காலை 7 மணியளவில் நெல்லளவு கண்டருளினார். அன்று இரவு 8 மணியளவில் பூந்தேரில் புறப்பாடு நடைபெற்றது.
நேற்று பகல் 11 மணியளவில் வழிநடை உபயங்கள் கண்டருளி குசஹஸ்திக்கரையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் பெருமாள் தாயாருடன் எழுந்தருளினார். இரவு 7.30 மணியளவில் குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெற்று திருவீதி வலம் வந்து வையாளி கண்டருளி அனந்தராயர் மண்டபத்திற்கு வந்தடைந்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. 10-ம் திருநாளான 25-ந் தேதி சப்தாவரணம் திருவீதி புறப்பாடும், 11-ம் திருநாளான 26-ந் தேதி ஆளும் பல்லக்கில் திருவீதி புறப்பாடும் நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X