search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழா 31-ந்தேதி தொடங்குகிறது
    X

    நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழா 31-ந்தேதி தொடங்குகிறது

    நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

    திருவிழாவில் 4-வது நாளான ஏப்ரல் மாதம் 3-ந் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ந் தேதி பங்குனி உத்திர நாளில் இரவு 7 மணிக்கு அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில், பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×