என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழா 31-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்24 March 2017 3:01 AM GMT (Updated: 24 March 2017 3:01 AM GMT)
நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.
திருவிழாவில் 4-வது நாளான ஏப்ரல் மாதம் 3-ந் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ந் தேதி பங்குனி உத்திர நாளில் இரவு 7 மணிக்கு அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில், பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
திருவிழாவில் 4-வது நாளான ஏப்ரல் மாதம் 3-ந் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ந் தேதி பங்குனி உத்திர நாளில் இரவு 7 மணிக்கு அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில், பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X