search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவில் பிரகாரம் சுற்றும் எண்ணிக்கையின் பலன்கள்
    X

    கோவில் பிரகாரம் சுற்றும் எண்ணிக்கையின் பலன்கள்

    கோவிலுக்கு சென்று கருவறையில் உள்ள தெய்வத்தை வணங்கிய பின்னர் பிரகாரத்தை சுற்றி வரவேண்டும். பிரகாரத்தை எத்தனை எண்ணிக்கையில் சுற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
    * ஒரு முறை கோவில் பிரகாரத்தை வலம் வந்தால் இறைவனை அணுகுதல் என்று பொருள்.

    * மூன்று முறை வலம் வந்தால் மனச் சுமை குறையும்.

    * ஐந்து முறை வலம் வந்தால் இஷ்டசித்தி கிடைக்கும்.

    * ஏழு முறை வலம் வந்தால் காரிய வெற்றி உண்டாகும்.

    * ஒன்பது முறை வலம் வருவதால் எதிரிகள் விலகுவர்.

    * பதினொரு முறை வலம் வந்தால் ஆயுள் விருத்தியாகும்.

    * பதிமூன்று முறை வலம் வந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.



    * பதினைந்து முறை வலம் வந்தால் தன லாபம் உண்டு.

    * பதினேழு முறை வலம் வருவதால் தானியம் சேரும்.

    * பத்தொன்பது முறை வலம் வந்தால் பிணிகள் நீங்கும்.

    * இருபத்தொரு முறை வலம் வந்தால் கல்வி விருத்தியாகும்.

    * இருபத்தி மூன்று முறை வலம் வந்தால் சுக வாழ்வு கிட்டும்.

    * நூற்றுயெட்டு முறை வலம் வந்தால் புத்திரபேறு கிடைக்கும்.

    * இருநூற்று எட்டு முறை வலம் வந்தால் யாகம் செய்த பலம் உண்டு.
    Next Story
    ×