search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காங்கேயநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது
    X

    காங்கேயநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது

    காங்கேயநல்லூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இது குறித்த செய்தியை பார்க்கலாம்.
    காங்கேயநல்லூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆட்டுக்கிடா வாகனத்திலும், 4-ந் தேதி மயில் வாகனத்திலும், 5-ந் தேதி நாகவாகனத்திலும், 6-ந் தேதி மயில்வாகனத்திலும், 7-ந் தேதி யானை வாகனத்திலும் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது.

    8-ந் தேதி ரத உற்சவமும், 9-ந் தேதி குதிரை வாகனத்தில் வீதி உலாவும் நடக்கிறது. 10-ந் தேதி காலை வள்ளி திருமண நிகழ்ச்சியும், 11-ந் தேதி சண்முகர் உற்சவமும், 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. 17-ந் தேதி லட்ச தீப திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் மாதவன், தக்கார் வடிவேலு ஆகியோர் செய்துவருகின்றனர்.
    Next Story
    ×