search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மாசிமக திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மாசிமக திருவிழா நாளை தொடங்குகிறது

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மாசிமக திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாசிமக திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 5.10 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.

    விழா நாட்களில் காலை 10 மணிக்கு, சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    இரவு 8 மணிக்கு மண்டகப்படி தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி- அம்பாள் வீதி உலாவும் நடக்கிறது. 9-ம் நாள் விழாவான 10-ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. சுவாமி, அம்பாள் தேர்கள் இழுக்கப்படுகின்றன.



    ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை நெல்லை இணை ஆணையாளர் லட்சுமணன், உதவி ஆணையாளர் சாத்தையா, கோவில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    இதேபோல் தென்காசி குலசேகரநாதர் கோவிலிலும் மாசிமக திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதி உலா நடக்கின்றன. வருகிற 11-ந் தேதி புஷ்பாஞ்சலி நடைபெறும்.

    ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயராமன், நிர்வாக அதிகாரி முருகன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×