search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குறிஞ்சிப்பாடியில் நடந்த மயானக்கொள்ளை விழாவில் அங்காளபரமேஸ்வரி அம்மன் வீதி உலா சென்ற போது எடுத்த படம்.
    X
    குறிஞ்சிப்பாடியில் நடந்த மயானக்கொள்ளை விழாவில் அங்காளபரமேஸ்வரி அம்மன் வீதி உலா சென்ற போது எடுத்த படம்.

    பண்ருட்டியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா

    குறிஞ்சிப்பாடி, பண்ருட்டியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    குறிஞ்சிப்பாடி உடையார் வீதியில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் மயானக்கொள்ளை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.

    நேற்று முன்தினம் மயானக்கொள்ளை விழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அங்காளபரமேஸ்வரி அம்மன் வீதி உலா சென்றார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று சின்னகடை வீதி அங்காளம்மன் கோவிலிலும் மயானக்கொள்ளை விழா நடந்தது.

    பண்ருட்டியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, சாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் மயானக்கொள்ளை விழா நடந்தது. முன்னதாக அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைசெய்து, சாமி வீதி உலா நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் ஏ.கே. மணி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×