search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்த போது எடுத்த படம்.
    X
    சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்த போது எடுத்த படம்.

    தைப்பூசத்தையொட்டி திருவந்திபுரம் தேவநாதசுவாமிக்கு சிறப்பு பூஜை

    தைப்பூசத்தையொட்டி திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கடலூர் அடுத்துள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தைப்பூச விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தேவநாதசுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்பட 18 விதமான பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    இதன் பின் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக் கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசுவாமி எழுந்தருளி வீதி உலா சென்றார். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் பட்டாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் நெல்லிக்குப்பம் அடுத்துள்ள கீழ் பட்டாம்பாக்கம் ஸ்ரீவீரபத்திர சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு அபிஷேகம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×